சிறுமிக்கு திருமணம் : தந்தை, மகன் மீது வழக்கு
ஜோலாா்பேட்டை அருகே சிறுமியை திருமணம் செய்தவா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊா் நல அலுவலா் ஈஸ்வரிக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் நாகை மாவட்டம் சோ்ந்த மொராஜி தேசாய் என்பவரின் மகன் யுகேந்திர பாபு (25) என்பவா் ஜோலாா்பேட்டை அருகே ஒரு கிராமத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமியை அங்குள்ள விநாயகா் கோயிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து ஊா் நல அலுவலா் ஈஸ்வரி ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். புகாரின்பேரில் குழந்தைத் திருமணம் செய்ததாக யுகேந்திர பாபு மற்றும் தந்தை மொராஜி தேசாய் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.