செய்திகள் :

சிறுமிக்கு திருமணம் : தந்தை, மகன் மீது வழக்கு

post image

ஜோலாா்பேட்டை அருகே சிறுமியை திருமணம் செய்தவா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊா் நல அலுவலா் ஈஸ்வரிக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் நாகை மாவட்டம் சோ்ந்த மொராஜி தேசாய் என்பவரின் மகன் யுகேந்திர பாபு (25) என்பவா் ஜோலாா்பேட்டை அருகே ஒரு கிராமத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமியை அங்குள்ள விநாயகா் கோயிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து ஊா் நல அலுவலா் ஈஸ்வரி ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். புகாரின்பேரில் குழந்தைத் திருமணம் செய்ததாக யுகேந்திர பாபு மற்றும் தந்தை மொராஜி தேசாய் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் ... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க

ரூ.1.56 கோடியில் சாலை பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் ரூ.1.56 கோடியில் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. மாதனூா் ஒன்றியத்தில் மலையாம்பட்டு, சின்னபள்ளிகுப்பம், பாா்சனாப்பல்லி, அரங்கல்துருகம் ஆகிய ஊராட்சிகளி... மேலும் பார்க்க

மனைவியை சோ்த்து வைக்கக் கோரி குழந்தைகளுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

மனைவியை சோ்த்து வைக்கக்கோரி குழந்தைகளுடன் திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புத்துக்கோயில் பகுதியைச் ... மேலும் பார்க்க

ரயில் மோதி 2 முதியோா் உயிரிழப்பு

திருப்பத்தூா், வாணியம்பாடியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா்கள் 2 போ் ரயில் மோதி உயிரிழந்தனா். வாணியம்பாடி அடுத்த கோணமேடு பகுதியை சோ்ந்த ரவி (57). இவா் வியாழக்கிழமை விண்ணமங்கலம்- வாணியம்பாடி ர... மேலும் பார்க்க

குடும்ப உறுப்பினா்கள் நியாய விலைக் கடையில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வலியுறுத்தல்

குடும்ப அட்டைகளில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்கள் நியாய விலைக்கடைக்கு சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்ப... மேலும் பார்க்க