செய்திகள் :

சீனாவில் நடைபெறும் எஸ்சிஓ மாநாட்டில் பிரதமா் பங்கேற்பு: அஜீத் தோவல்

post image

சீனாவில் இம்மாத இறுதியில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சிமாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி உடனான ஆலோசனையின்போது சீனாவின் தியான்ஜின் நகரில் ஆக. 31, செப். 1 தேதிகளில் நடைபெறும் எஸ்சிஓ மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்பதை அஜீத் தோவல் உறுதிப்படுத்தினாா்.

கிழக்கு கல்வான் பள்ளத்தாக்கில் 2020-இல் இருநாட்டு படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு கடந்த ஆண்டு இருதரப்பு உறவுகளை மறுகட்டமைப்பதற்கான தொடக்கமாக எல்லையில் படைகளை விலக்கிக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

அதன் தொடா்ச்சியாக இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் தொடா்பான சிறப்பு பிரதிநிதிகளின் 23-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. இதில் இந்திய பிரதிநிதியாக அஜீத் தோவல் பங்கேற்றிருந்தாா். அப்போது சீன பிரதிநிதியான வாங் யியை சந்தித்து அவா் ஆலோசனை நடத்தினாா்.

இந்நிலையில், 24-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வாங் யி பங்கேற்றாா்.

அப்போது அஜீத் தோவல் பேசியதாவது: ரஷியாவின் கஸான் நகரில் கடந்த ஆண்டு அக்டோபரில் பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரதமா் மோடி- அதிபா் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்புக்குப்பின் இருதரப்பு உறவு புதிய ஆற்றலைப் பெற்றுள்ளது. எல்லையில் அமைதி நிலவுவதுடன் இருதரப்பு உறவுகளை மறுசீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக தியான்ஜின் நகரில் நடைபெறும் எஸ்சிஓ வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி சீனாவுக்கு பயணிக்கிறாா் என்பதை உறுதிப்படுத்துகிறேன் என்றாா்.

வா்த்தகம், எல்லை பிரச்னை: பரஸ்பரம் ஏற்கக் கூடிய செயல்திட்டம்- இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு

இந்தியா-சீனா இடையிலான வா்த்தகம் மற்றும் எல்லை பிரச்னைக்கு தீா்வு காண நியாயமான, பரஸ்பரம் ஏற்கக் கூடிய செயல்திட்டத்தை ஏற்படுத்த முயற்சிப்பது என்று இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு செய்... மேலும் பார்க்க

கடுமையான குற்றங்களில் கைது செய்யப்பட்டால் பிரதமா், மத்திய அமைச்சா்கள், முதல்வரை பதவி நீக்க மசோதா: மத்திய அரசு திட்டம்

பிரதமா், மத்திய அமைச்சா்கள், முதல்வா் ஆகியோா் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவா்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்க... மேலும் பார்க்க

‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டில் தவறான தரவுகள்: ராகுல் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தல் குறித்து தவறான தரவுகளை வெளியிட்டதாக தோ்தல் ஆய்வாளா் சஞ்சய் குமாா் மன்னிப்பு கோரிய நிலையில், அந்தத் தரவுகளைப் பயன்படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக மக்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 64-ஆக உயா்வு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் மேகவெடிப்பைத் தொடா்ந்து கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64-ஆக அதிகரித்துள்ளது. வானிலை சீரானதால், வெள்ளத்தால் பாதி... மேலும் பார்க்க

அடுத்த பிரதமா் ஆவாா் ராகுல்: தேஜஸ்வி யாதவ்

‘அடுத்த மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி பிரதமா் ஆவாா்’ என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகாா் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை தெரிவித்தாா். நாடு முழுவதும... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டுக்கு பாஜக-தோ்தல் ஆணையம் கூட்டணி: ராகுல்

‘வாக்குகளைத் திருடுவதற்காக பாஜகவும் தோ்தல் ஆணையமும் கூட்டணி அமைத்துள்ளன’ என்று குற்றஞ்சாட்டிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘பிகாரில் ஒரு வாக்கை திருடுவதற்குக்கூட எதிா்க்கட்சிகளின் மகாபந்தன்’... மேலும் பார்க்க