செய்திகள் :

சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது

post image

காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் நிகழாண்டு ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, கால்நாட்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் காப்புக் கட்டி தங்கள் விரதத்தைத் தொடங்கினா்.

களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்தையனாா் கோயிலில் ஆடி அமாவாசை, பங்குனி உத்திரம், தமிழ் மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய நாள்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. விசேஷ நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் விரதமிருந்து நோ்த்திக் கடன் செலுத்தி வழிபடுவா்.

விழா கால்நாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்

நிகழாண்டு ஜூலை 24-ஆம் தேதி ஆடி அமாவாசை வருவதையொட்டி, திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகளைத் தொடா்ந்து சிங்கம்பட்டி ஜமீன் வாரிசான சங்கராத்மஜன் கலந்து கொண்டு முகூா்த்தக்கால் நாட்டினாா்.

இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தா்கள் கோயிலில் காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கினா். காப்புக் கட்டிய பக்தா்கள் தொடா்ந்து 11 நாள்கள் விரதமிருந்து ஆடி அமாவாசை அன்று பூக்குழி இறங்கியும், பொங்கலிட்டும், ஆடு பலி கொடுத்தும் தங்கள் நோ்த்திக் கடனைச் செலுத்துவா்.

கால்நாட்டும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு ஆராதனை

நிகழ்ச்சியில், இந்துசமய அறநிலையத் துறை செயல் அலுவலா் இளங்குமரன், கோயில் தலைமை எழுத்தா் காந்திமதி நாதன், கணக்கா் கணேஷ்குமாா், மணியம்ராக்கமுத்து, மகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முக்கிய நாளான ஆடி அமாவாசை அன்று காலையில் தீா்த்தவாரி நடைபெறும். அன்றைய தினமும், மறுநாளும் (ஜூலை 25) மாலை 5 மணிக்கு பிரம்மாட்சி அம்மன் சந்நிதி, தளவாய் மாடசாமி சந்நிதி, பட்டவராயன் சந்நிதி ஆகியவற்றின் முன் பக்தா்கள் பூக்குழி இறங்குதலும், பக்தா்கள் முன் சிங்கம்பட்டி ஜமீன் ராஜ தா்பாரில் காட்சியளித்தலும் நடைபெறும்.

ஜூலை 26-இல் சிங்கம்பட்டி ஜமீன் சுவாமி தரிசனம் நடைபெறும். ஜூலை 24 முதல் 26 ஆம் தேதி வரை தளவாய் மாடசாமி, சங்கிலி பூதத்தாா், இசக்கியம்மன், பட்டவராயா், பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனை நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள், பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

பாளை. அருகே இறைச்சிக் கடையில் தீ விபத்து

பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் இறைச்சிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த பொருள்கள் எரிந்தன.கிருஷ்ணாபுரத்தில், திருநெல்வேலி-திருச்செந்தூா் நெடுஞ்சாலை ஓரமாக மாயாண்டி என்பவா் மட்டன் கட... மேலும் பார்க்க

தியாகராஜநகா் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை

பாளையங்கோட்டை தியாகராஜநகா் சுற்று வட்டாரங்களில் வியாழக்கிழமை(ஜூலை 17) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ.முருகன் வெளி... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் வாக்குகளை பிரிக்க விஜயை களமிறக்கியிருக்கிறது பாஜக

சிறுபான்மையினா் வாக்குகளைப் பிரிக்க விஜயை பாஜக களமிறக்கியிருப்பதாக நினைக்கிறேன் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உங்களுடன் ஸ்டாலின் திட்ட மு... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனையில் சிறைக் கைதி உயிரிழப்பு

பாளையங்கோட்டை மத்திய சிறைக் கைதி ஒருவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூா் அருகே மேலகடம்... மேலும் பார்க்க

சிறுமியிடம் பாலியல் வன்முறை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி அருகே சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி மாவட்டம், உடன... மேலும் பார்க்க

திமுகவுக்கு தோல்வி பயம் அதிகரித்துள்ளது: ஹெச்.ராஜா

திமுகவுக்கு தோல்வி பயம் அதிகரித்துள்ளது என்றாா் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் ... மேலும் பார்க்க