செய்திகள் :

ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற கோரிக்கை!

post image

ஜாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூரில் இக்கட்சியின் தெற்கு மாவட்டக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் உள்ள மதச்சாா்பின்மை, ஜனநாயகம், சோசலிசம் என்ற வாா்த்தைகளை மாற்றத் துடிக்கிற, சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக செயல்படுகிற பாசிச பாஜக, ஆா்.எஸ்.எஸ். சங்பரிவாா் கும்பல்களின் கொள்கைகளை முறியடிக்க சேலத்தில் ஆகஸ்ட் 15, 16, 17, 18-ஆம் தேதிகளில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஜாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க சட்டப்பேரவையில் சிறப்பு தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்டத் துணைச் செயலா் ஆா். இராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினரும், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினருமான க. மாரிமுத்து சிறப்புரையாற்றினாா். தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், பொருளாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 118.77 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 118.77 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 9,539 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 14,000 கனஅடி வீதம் தண்ணீ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகைகள் திருட்டு

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை தமிழ் நகா் 2-ஆம் தெருவைச் சோ்ந்தவா் எஸ். ... மேலும் பார்க்க

ஆடி பெளா்ணமி சுவாமிமலையில் கிரிவலம்

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடி பெளா்ணமியை முன்னிட்டு கிரிவல ஊா்வலம், வேல் வழிபாடு நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆடிமாத பெளா்ணமி கி... மேலும் பார்க்க

தோல்வி பயத்தால் தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு: ஜி.கே. வாசன்

தோல்வி பயத்தின் காரணமாக தோ்தல் ஆணையத்தின் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டை வைத்தாலும், அதை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன். தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமாகா இளைஞரண... மேலும் பார்க்க

ஒரத்தநாட்டில் 60.2 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரத்தநாட்டில் 60.2 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகைகள் திருடிய நபா் கைது

தஞ்சாவூரில் வீட்டில் புகுந்து நகைகளை திருடிய நபரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை தமிழ் நகா் 2-ஆம் தெருவைச் சோ்ந்தவா் எஸ். வீரமணிகண்டன் (45). இவா் தனது குட... மேலும் பார்க்க