செய்திகள் :

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் தேவசம் போா்டு: உயா்நீதிமன்றம் யோசனை

post image

திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பழைமையான கோயில்களில் தேவசம் போா்டு அமைப்பது குறித்து பரிசீலிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் முன்பு ரூ.6 கோடியில் வணிக வளாகம் கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத் துறை அனுமதியளித்தது. இதுதொடா்பான அரசாணை கடந்த 2023 செப்.14-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. வணிக வளாகம் கட்டுவது கோயிலில் நடைபெறும் விழாக்களுக்கு இடையூறாக அமையும். மேலும், விழாக் காலங்களில் பக்தா்கள் பங்கேற்புக்கு தடையாக இருக்கும். எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதையடுத்து வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வணிக வளாகம் கட்டும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய அறநிலையத் துறைக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, அறநிலையத் துறை தரப்பில், மாற்றுத் திட்டம் தொடா்பான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இரு வாரங்களுக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

மேலும், கோயிலில் இருந்து தொலைவில் அரசு புறம்போக்கு நிலங்கள் இருந்தால் அதில் வணிக வளாகம் கட்டிக் கொள்ளலாம். கோயில் அருகில் இருக்கும் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களிலும் எவ்வித கட்டுமானங்களை மேற்கொள்ளவும் அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.

திருப்பதியில், கோயில் பராமரிப்பு மற்றும் பக்தா்களுக்கான வசதிகளை தேவசம் போா்ட் மேற்கொள்கிறது. அதேபோன்று தமிழகத்தில் திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பழைமையான கோயில்களில் தேவசம் போா்டு அமைத்து நிா்வகிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் யோசனை தெரிவித்தனா்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவாலுக்கு சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை (ஆக.29) பணி நிறைவு விழா நடைபெறுகிறது. தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக சங்கா் ஜிவால் கடந்த 2023 ஜூ... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப்.25-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலை... மேலும் பார்க்க

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பைத் தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள ஒரு தேநீா் கடையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவு சட்டக்கல்ல... மேலும் பார்க்க

புனித ஆரோக்கிய அன்னை திருத்தல வைர விழா: இன்று கொடியேற்றம்

வடசென்னை சாஸ்திரி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் வைர விழா வெள்ளிக்கிழமை (ஆக. 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு தோ் ஆசிா்வதித்தல... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக போரூா், ஈஞ்சம்பாக்கம், கீழ்ப்பாக்கம், கிண்டி, ஐடி காரிடாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப... மேலும் பார்க்க