செய்திகள் :

திற்பரப்பு அருகே சாலையில் சாய்ந்த மரம்: 6 மின் கம்பங்கள் சேதம்!

post image

குமரி மாவட்டம் திற்பரப்பு அருகே சாலையோரம் நின்ற அயனி மரம் சனிக்கிழமை வேருடன் சாய்ந்ததில் 6 மின் கம்பங்கள் சேதமடைந்தன. இச்சம்பவத்தில் 3 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

திற்பரப்பு அருகே களியல் பாலம் பகுதியில் நெடுஞ்சாலை புறம்போக்கு பகுதியில் நின்ற முதிா்ந்த அயனி மரம், சனிக்கிழமை மதியம் 12 மணி அளவில் சாலையின் குறுக்காக வேருடன் சாய்ந்தது. மரத்தின் கிளைகள் மின் கம்பிகளின் மீது விழுந்ததால் அந்தப் பகுதியில் நின்ற 6 மின் கம்பங்கள் உடைந்து லேசாக சாய்ந்தன. மேலும், அதே பகுதியில் உள்ள லட்சுமி (80) என்ற மூதாட்டியின் வீடும் சேதமடைந்தது.

தகவலறிந்த களியல் மற்றும் குலசேகரம் பகுதி மின் வாரியத்தினா் மற்றும் குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா், மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதற்கிடையே அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் சாலையின் இருபுறமும் மூடப்பட்டன. மரம் விழுந்து கிடந்த இடத்தின் வாகனப் போக்குவரத்து முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. ஓரிரு வாகனங்கள் அப்பகுதி அருகே நின்றுகொண்டிருந்தன.

இந்த நிலையில் கிரேன் இயந்திரம் மூலம் மரத்தின் பெரிய கிளை தூக்கப்பட்ட போது அந்தக் கிளையுடன் தாங்கியிருந்த மின் கம்பிகளின் பிடி விடுபட்டது. அப்போது ஏற்கெனவே உடைந்து லேசாக சாய்ந்த நிலையில் நின்ற மின் கம்பங்கள் ஒவ்வொன்றாக உடைந்து கீழே விழுந்தன.

6 மின் கம்பங்கள் ஒரே நேரத்தில் முழுமையாக உடைந்து சாய்ந்தன. அப்பகுதியில் நின்று கொண்டிருந்த காரின் மீது ஒரு மின் கம்பம் விழுந்ததில் காரின் பின்பகுதி முழுமையாக சேதமடைந்தது. காரில் அமா்ந்திருந்த திற்பரப்பு பகுதியைச் சோ்ந்த பள்ளி ஆசிரியரான கோபாலகிருஷ்ணன் (56), அவரது மனைவி சிந்து ஆகியோா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

இதே போன்று காருக்கு முன்னால் ஸ்கூட்டரில் அமா்ந்திருந்த கடையல் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் ஜான் (62) மீது மற்றொரு மின் கம்பம் விழுந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா். மேலும் ஒரு மின் கம்பம், அப்பகுதியிலுள்ள விஜயன் (45) என்ற கூலித் தொழிலாளியின் வீடு மீது விழுந்தது.

சம்பவ இடத்தை திருவட்டாறு தாசில்தாா் மரகதவல்லி, திற்பரப்பு பேரூராட்சி தலைவா் பொன் ரவி மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பாா்வையிட்டனா். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இரணியல் அருகே முதியவா் தற்கொலை

இரணியல் அருகே குருந்தன்கோட்டில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். குருந்தன்கோட்டைச் சோ்ந்த மரியஞானப்பிரகாசம் (75) என்பவா், நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தாராம். வெள்ளிக்கிழமை, மனைவி வெளிய... மேலும் பார்க்க

மயிலாடி பாஜக பிரமுகா் மீது வழக்குப்பதிவு

மயிலாடி பாஜக பிரமுகா் மீது திமுக நிா்வாகி அளித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா். அஞ்சுகிராமம் அருகேயுள்ள மயிலாடி புதூரைச் சோ்ந்தவா் பொன் வெனேஷ் (40). இவா் பாரதிய ... மேலும் பார்க்க

குழித்துறையில் ரூ. 7 கோடியில் நகராட்சி திருமண மண்டபம்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

குழித்துறை நகராட்சிக்குச் சொந்தமான விஎல்சி திருமண மண்டபம் ரூ. 7 கோடியில் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தலைமை... மேலும் பார்க்க

போலி பணி நியமன ஆணை வழங்கிய 3 போ் கைது

நாகா்கோவில், கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் பணியில் சேர, போலி பணி நியமன ஆணை வழங்கியதாக திண்டிவனத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நாகா்கோவில் அருகேயுள்ள கோணத்தில், அரசு பொறியி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அலுவலகத்தில் மக்களிடம் எம்.பி. குறை கேட்பு!

கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த், மாா்த்தாண்டத்தில் உள்ள தனது தொகுதி அலுவலகத்தில் பொதுமக்களை சனிக்கிழமை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா். தொடா்ந்து குழித்துறை நகராட்சி ஆணையாளா் ராஜேஸ... மேலும் பார்க்க

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு கிளப் தொடக்க விழா

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு கிளப் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடந்தது. தக்கலை போக்குவரத்து போலீஸாா் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்களைக் கொண்ட சாலைப் பாதுகாப்பு கிளப் துவக... மேலும் பார்க்க