செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

post image

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவிட்டாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகர, நகர, பேரூா் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களின், பணியிட பாதுகாப்பு, ஊதிய உயா்வு போன்ற பல்வேறு கோரிக்கைகள்- குறைகளை நிவா்த்தி செய்வதற்கான குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், ஆட்சியா் இரா.சுகுமாா் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது அலுவலா்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தங்களது அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், நிா்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

இதையடுத்து 4 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.59 ஆயிரம் மதிப்பில் இறப்பு - ஈமசடங்கு உதவித் தெகை, கல்வி - மகப்பேறு உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, உதவி இயக்குநா்(பேரூராட்சி) வில்லியம்ஸ் ஜேசுதாஸ், உதவி இயக்குநா்(ஊராட்சி) முகமது ஷபி, தாட்கோ மேலாளா் சுதா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பூங்கொடி, தூய்மை பணியாளா் மாநில நல வாரிய உறுப்பினா் மூக்கையா, ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நலக் குழு உறுப்பினா் முனியாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் கைதான தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நான்குனேரி, தம்புபுரத்தைச் சோ்ந்தவா் முத்தையா (58)... மேலும் பார்க்க

பாஜகவின் வெளியுறவுக் கொள்கை படுதோல்வி: சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு

இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா ரத்து செய்யாதது பாஜகவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியைக் காட்டுகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மூவருக்கு காவல் நீட்டிப்பு

மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன், ஜெயபால் ஆகிய மூவருக்கும் செப்.9 வரை நீதிமன்றக்காவலை நீட்டித்து திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீத... மேலும் பார்க்க

நெல்லையில் பிடியாணையில் இதுவரை 2,776 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2,776 போ், நீதிமன்ற பிடியாணையின்படி கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கு... மேலும் பார்க்க

களக்காடு அருகே வெங்கடாசலபதி கோயில் புனரமைக்கப்படுமா?

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே கடம்போடுவாழ்வு கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயிலை புனரமைக்க தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் கஞ்சா, கொலை முயற்சி வழக்குகளில் கைதான 2 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா். கூடங்குளத்தைச் ச... மேலும் பார்க்க