எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: நெல்லை மாணவா் முதலிடம்
தென்னாப்பிரிக்க சரணாலயத்தில் யானை தாக்கி தொழிலதிபர் பலி!
தென்னாப்பிரிக்காவின் மிகவும் பிரபலமான விளையாட்டு சரணாலயங்களில் ஒன்றின் இணை உரிமையாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான எஃப்சி கான்ராடி யானை மிதித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோசல் விரிகுடாவிற்கு அருகிலுள்ள 27 ஏக்கர் வனவிலங்கு புகலிடமான கோண்ட்வானா தனியார் விளையாட்டு சரணாலயத்தில் ஜூலை 22 அன்று இந்த சம்பவம் நடைபெற்றது.
39 வயதான கான்ராடி வனவிலங்கு ஆர்வலர். சுற்றுலா விடுதிகளிலிருந்து யானைகள் கூட்டத்தை வழிநடத்த முயன்றபோது, அவர் எதிர்பாராத விதமாக ஆறு டன் எடையுள்ள யானை ஒன்று கோண்ட்வானாவை தனது தந்தங்களால் குத்தி, பலமாகத் தாக்கி மிதித்துக் கொன்றது
அருகில் வனக்காப்பாளர்கள் கான்ராடியை காப்பாற்றி முதலுதவி செய்தனர். இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யானைகள் மீது அதீத அன்பு கொண்ட கான்ராடி யானைகளைப் புகைப்படம் எடுப்பது வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் அவர் விலங்கியல், விலங்கு ஆய்வுகள், வணிகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளில் கௌரவப் பட்டம் பெற்றவர்.
அவருக்கு மனைவி லா-இடா(33) இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.