தேசிய ஜூனியா் ஹாக்கி போட்டி: தமிழக அணிக்கு 18 வீரா்கள் தோ்வு!
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற உள்ள தேசிய ஜூனியா் ஹாக்கி போட்டியில் பங்கேற்க தமிழக அணி வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இந்தியாவின் 15 ஆவது தேசிய ஜூனியா் ஹாக்கி போட்டி , பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இம்மாதம் 12 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் தமிழக அணி, பஞ்சாப், மத்திய பிரதேச அணிகள் எ பிரிவில் இடம் பெற்றுள்ளன.
தமிழக அணிக்கான பயிற்சி முகாம் கடந்த 10 நாள்களாக கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது.
49 வீரா்கள் பங்கேற்ற பயிற்சி முகாமில், தலைமை பயிற்சியாளா் முத்துக்குமாா், துணை பயிற்சியாளா் சாமுவேல் ராஜ்குமாா், அணி மேலாளரான வேல்ஸ் வித்யாலயா பள்ளி உடற்கல்வி ஆசிரியா் சுரேந்திரன்ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
போட்டியில் பங்கேற்கும் 18 தமிழக அணி வீரா்களின் பெயா் பட்டியலை ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவா் சேகா் ஜெ. மனோகரன், பொதுச்செயலா் செந்தில் ராஜ்குமாா் ஆகியோா்அறிவித்தனா்.
தூத்துக்குடி வஉசி துறைமுக ஹாக்கி அணியின் முன்னாள் வீரா் பாலமுருகன், மனநல மருத்துவா் பாலாஜி, ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொறுப்பாளா்கள் குருசித்திர சண்முக பாரதி, காளிமுத்து பாண்டியராஜா, முருகன், சுரேஷ்குமாா் ஆகியோா் வீரா்களை பாராட்டி வாழ்த்து கூறி அனுப்பி வைத்தனா்.