செய்திகள் :

நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்!

post image

நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று நெல்லையப்பர் அருள்மிகு காந்திமதி அம்மன் திருக்கோயில். இங்கு மாதம்தோறும் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆனிப் பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் இந்த திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் திருவிழா நடந்து வருகிறது.

திருவிழாவின் ஒவ்வொரு நாளும் காலை மாலை இரு வேளைகளிலும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் சிகர நிகழ்வான ஒன்பதாம் திருநாளான இன்று திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை ஒட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தேருக்கு எழுந்தருளினர்.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் வடம் பிடித்து தேரை இழுத்து விழாவைத் தொடங்கி வைத்தனர். பின்னர் பக்தர்கள் சிவாய நமக, நமச்சிவாய கோஷங்கள் விண் அதிர தேர் நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்தது. இதனை அடுத்து அம்பாள் தேரும் இழுக்கப்பட்டது. தேர்த் திருவிழாவையொட்டி பாதுகாப்புப் பணியில் 2000 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட்புரூஸ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அப்துல்வகாப், ரூபிமனோகரன், நயினார் நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர் சுகுமார், மேயர் ராமகிருஷ்ணன் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The Anip Perundhiruvizha procession was held with great enthusiasm at the Nellai Nellaiappar Gandhimati Ambal Temple.

கொல்கத்தாவில் கனமழை - புகைப்படங்கள்

கனமழையால், சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரிலும் தனது பயனத்தை மேற்கொண்ட ரிக்‌ஷாக்காரர்.கொல்கத்தாவில் வெளுத்து வாங்கிய கனமழையால், சாலையை ஆக்கிரமித்த மழைநீர் வழியாக தனது வாடிக்கையாளருடன் பயனத்தை மேற்கெ... மேலும் பார்க்க

பல விருதுகள், சர்ச்சைகளுக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் பேட் கேர்ள்!

வெற்றி மாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள பேட் கேர்ள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட் கேர்ள் திர... மேலும் பார்க்க

ஹிருத்திக் ரோஷனிடம் அதிகம் கற்றுக்கொண்டேன்: ஜூனியர் என்டிஆர்

வார் - 2 படத்தில் ஜூனியர் என்டிஆர், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 150 நாள்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு 5 நாடுகளில் நடைபெற்றன. யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அயன் ... மேலும் பார்க்க

இந்தக் குழப்பமான உலகில்... பறந்து போ படத்தைப் பாராட்டிய நயன்தாரா!

நடிகை நயன்தாரா பறந்து போ திரைப்படம் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். இயக்குநர் ராம் இயக்கத்தில் சிவா நடிப்பில் பறந்து போ திரைப்படம் ஜூலை 4 முதல் உலகம் முழுவதும் வெளியானது.நடிகர்கள் சி... மேலும் பார்க்க

மாரீசன் முதல் பாடல் ரிலீஸ் தேதி!

வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான மாரீசன் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. மாமன்னனில் மிகச்சிறப்பாகநடித்தவடிவேலுவை நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முயன்... மேலும் பார்க்க

நீங்கள் 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குகிறீர்களா?

நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது உடல், மன ஆரோக்கியத்தில் கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவு, தண்ணீர் எப்படி மனிதனுக்கு அவசியமோ அதேபோல தூக்கம... மேலும் பார்க்க