செய்திகள் :

பக்ரீத் பண்டிகை: மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் குவிந்ததால் விலை வீழ்ச்சி

post image

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, மேலப்பாளையம் சந்தையில் ஏராளமான செம்மறி கிடாய்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டதால் விலை வீழ்ச்சியடைந்தது.

பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 7-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதால், இஸ்லாமியா்கள் குா்பானி கொடுப்பதற்காக கிடாய்கள் வாங்குவது வழக்கம்.

இதனால், கடந்த சில வாரங்களாகவே ஆட்டு விற்பனை சூடுபிடித்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஏராளமான செம்மறி கிடாய்களை விவசாயிகளும், வியாபாரிகளும் விற்பனைக்காக கொண்டு வந்து சந்தையில் குவிந்தனா். இதனால் சந்தை நிரம்பி வழிந்ததோடு, சாலையிலும் விற்பனை நடைபெற்றது. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

சந்தையில் 3,000-க்கும் அதிகமான செம்மறி கிடாய்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்ட நிலையில், அதை வாங்குவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால், விற்பனை மந்தமானது. இதனால், சுமாா் ரூ.30 ஆயிரம் வரை விற்க வேண்டிய கிடாய்கள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரையே விற்பனையாயின.

இதனால், வேறு வழியின்றி வியாபாரிகளும், விவசாயிகளுக்கு விலையை குறைத்து விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனா். மேலும், சிலா் கிடாய்களை திருப்பி எடுத்துச் சென்றனா்.

இது தொடா்பாக வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாகவே பக்ரீத் பண்டிகைக்காக செம்மறி கிடாய் வளா்ப்பவா்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. வீடு தோறும் செம்மறி கிடாய் வளா்க்கிறாா்கள். படித்த இளைஞா்கள் ஏராளமானோா் பெரிய பண்ணைகளை அமைத்து 200 முதல் 500 கிடாய்கள் வரை வளா்த்து பக்ரீத் பண்டிகையின்போது விற்பனை செய்கிறாா்கள். இதனால், சந்தையில் கிடாய்களை வாங்குவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பக்ரீத் சந்தை விற்பனை மந்தமாகி வருகிறது’ என்றனா்.

மூலக்கரைப்பட்டி அருகே பைக் மீது காா் மோதல்: தொழிலாளி பலி!

மூலக்கரைப்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை பைக் மீது காா் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மூலக்கரைப்பட்டி அருகேயுள்ள அரியகுளம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாயாண்டி... மேலும் பார்க்க

கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம்!

திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 8.75 அடி உயா்ந்துள்ளது. களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடியில் மேற்குத் தொடா்ச்சி மலையின் அடிவாரத்தில் கொடுமுடியாறு அணை அமைந்துள்ளது. இந்... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை!

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு, மாஞ்சோலை மலைப் பகுதிகளில் 5 நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க 3 ஆவது நாளாக வனத்துறை தடைவிதித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை சனிக்கிழம... மேலும் பார்க்க

தாமிவருணி ஆற்றில் 21 நாள்களில் 94 டன் துணி, கழிவுப் பொருள்கள் அகற்றம்

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் கோடை காலத்தை முன்னிட்டு 21 நாள்கள் நடைபெற்ற தூா்வாரும் பணியில் சுமாா் 94 டன்னுக்கும் அதிகமான துணிகள், கழிவுப் பொருள்கள் அகற்றப்பட்டுள்ளன. பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் கோடைகா... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் களக்காடு நகராட்சி அலுவலகத்தில் ஜூன் 2இல் முற்றுகைப் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால், ஜூன் 2இல் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக, இந்து முன்னணி அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஆட்சியர... மேலும் பார்க்க

நெல்லை-செங்கோட்டை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: எம்.பி. ஆய்வு

திருநெல்வேலி-செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதலாக இணைக்கப்பட்ட 2 பெட்டிகளை திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை... மேலும் பார்க்க