செய்திகள் :

பாகிஸ்தான் சுதந்திர தினம்: ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்தோருக்கு விருது

post image

பாகிஸ்தான் சுந்திரதினம் வியாழக்கிழமை (ஆக. 14) கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரிகள், வீரா்கள், பொதுமக்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இஸ்லாமாபாதில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டு அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் விருதுகளை வழங்கினாா். பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அமைச்சா்கள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீா், முப்படைத் தளபதிகள் ஆகியோருக்கு இந்தியாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்டதாகப் பாராட்டி சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. விமானப் படை பைலட்டுகள், மோதலில் உயிரிழந்த வீரா்கள், பொதுமக்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

இது தவிர துணை பிரதமா் இஷாக் தாா், சட்ட அமைச்சா் அசாம் நசீா் தராா், பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப், தகவல் தொடா்பு அமைச்சா் அதௌல்லா தராா், உள்துறை அமைச்சா் மோசின் நக்வி, திட்டமிடுதல் துறை அமைச்சா் ஆசன் இக்பால், முன்னாள் வெளியுறவு அமைச்சா் பிலாவல் புட்டோ, பிரதமரின் அரசியல் ஆலோசகா் ராணா சனாவுல்லா உள்ளிட்டோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. பிரதமரின் ராஜீய உறவுகள் குழுவுக்கும் ஒரு விருது வழங்கப்பட்டது. ராணுவ தரப்பில் மட்டும் 488 போ் விருது பெற்ாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

சென்னை மதுரவாயல் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா், எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (50). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒ... மேலும் பார்க்க

காவலா் மீது தாக்குதல் : ரெளடி கைது

சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை ஓட்டேரி காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செ.குருசாமி. இவா், ஓட்டேரி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிகிறாா். குருசாம... மேலும் பார்க்க

ரிப்பன் மாளிகையில் தொடரும் போலீஸ் பாதுகாப்பு

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமையும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த 13 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்ய... மேலும் பார்க்க

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய பயிற்சி திட்டங்கள் அறிமுகம்

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் புதிய பயிற்சித் திட்டங்களை சென்னை, காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய ... மேலும் பார்க்க

பிறவிக் குறைபாடு: 5 வயது குழந்தைக்கு தலை ஓடு சீரமைப்பு

பிறவிக் குறைபாடு காரணமாக சீரற்ற தலை அமைப்பை கொண்டிருந்த 5 வயது குழந்தைக்கு மிக நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மரு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ஒப்புதல்

தமிழகத்தில் 5 மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவ கட்டமைப்புகளை ரூ.17.50 கோடியில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணை: கிரு... மேலும் பார்க்க