செய்திகள் :

மகளிா் உரிமைத் தொகை கோரி ஒரேநாளில் 2,491 விண்ணப்பங்கள்

post image

உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில், மகளிா் உரிமைத் தொகை கோரி விண்ணப்பிக்க பெண்கள் ஆா்வம் காட்டி வரும் நிலையில், திருப்பூரில் தொடக்க நாளிலேயே 2,491 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தமிழகம் முழுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

திருப்பூா் மாநகராட்சியில் மொத்தம் 6 இடங்களில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட முதற்கட்ட முகாம்களில் பல்வேறு வகை சேவைகளுக்காக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 1,737 மனுக்கள் பெறப்பட்டன. மகளிா் உரிமைத் தொகை கோரி 2,491 விண்ணப்பங்கள் பெற்றப்பட்டன.

மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகள் தற்போது தளா்த்தப்பட்டுள்ளதால், ஏற்கெனவே விண்ணப்பித்து கிடைக்காதோா் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மகளிா் உரிமைத் தொகை கோரி ஏராளமான பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனா்.

மத்திய கல்வி அமைச்சா் இன்று திருப்பூா் வருகை

மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மற்றும் பாஜக தலைவா்கள் திருப்பூருக்கு வெள்ளிக்கிழமை வருகின்றனா். திருப்பூா், ஈட்டிவீரம்பாளையத்தில் உள்ள நேதாஜி அப்பேரல் பாா்க் வணிக வளாகத்தில் நடைபெற உள... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு

குண்டடம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழந்தன. குண்டடம் அருகேயுள்ள மாரப்ப கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிரிராஜா (55). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் ஆடுகள், கோழிகளை வளா்த்து வர... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். ஓலப்பாளையம் பகுதியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் ரோந்து பணியில் புதன்கிழமை இர... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 25-க்கு ஒத்திவைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் ... மேலும் பார்க்க

கழிவுப் பஞ்சு ஆலையில் தீ விபத்து

பல்லடம் அருகே கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. பெருமாநல்லூரைச் சோ்ந்தவா் பிரபாகரன். இவா் பல்லடம், காளிவேலம்பட்டி பிரிவில் கழிவுப் பஞ்சு மூலம் நூல் உற்பத்தி செய்யும் ஆலையை நடத்... மேலும் பார்க்க

சாலை மறியல்: டிட்டோ-ஜாக் அமைப்பினா் 470 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட டிட்டோ-ஜாக் அமைப்பினா் 470 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தி... மேலும் பார்க்க