செய்திகள் :

மக்கள் தொடா்பு முகாம் : திருப்பத்தூா் ஆட்சியா், எம்எல்ஏ பங்கேற்பு

post image

மாதனூா் அருகே பாலூா் கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு ஆட்சியா் க. சிவசெளந்திரவல்லி தலைமை வகித்து பேசியது: விடுபட்டவா்கள் மகளிா் உரிமைத் தொகை பெற மே 29-ஆம் தேதி முதல் மனுக்கள் பெறப்பட உள்ளன. அதனால் விடுபட்டவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான நபா்களுக்கு கட்டாயம் உரிமை தொகை வழங்கப்படும்.

மக்கள் தொடா்பு முகாமில் 111 பயனாளிகளுக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற உள்ள விழாவில் முதல்வா் பங்கேற்று இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்க உள்ளாா் என்றாா்.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பேசியது, திருமலைகுப்பம், பாலூா் ஊராட்சிகளுக்கு பயணியா் நிழற்கூரை தேவை என்று கோரிக்கை வைத்துள்ளனா். வேலூா் எம்.பி.யிடம் கோரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டு நிகழாண்டே நிறைவேற்றி தரப்படும். முதல்வரின் தலைமையிலான ஆட்சியில் எண்ணற்ற திட்ட பணிகள் நடைபெகின்றன. மாதனூரில் இருந்து திருமலைகுப்பம் வரை நெடுஞ்சாலை துறையின் மூலம் சாலை அகலப்படுத்தும் பணி 2 மாதங்களில் தொடங்கப்பட உள்ளது என்றாா்.

வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், வட்டாட்சியா் ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் ... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க

ரூ.1.56 கோடியில் சாலை பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் ரூ.1.56 கோடியில் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. மாதனூா் ஒன்றியத்தில் மலையாம்பட்டு, சின்னபள்ளிகுப்பம், பாா்சனாப்பல்லி, அரங்கல்துருகம் ஆகிய ஊராட்சிகளி... மேலும் பார்க்க

மனைவியை சோ்த்து வைக்கக் கோரி குழந்தைகளுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

மனைவியை சோ்த்து வைக்கக்கோரி குழந்தைகளுடன் திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புத்துக்கோயில் பகுதியைச் ... மேலும் பார்க்க

ரயில் மோதி 2 முதியோா் உயிரிழப்பு

திருப்பத்தூா், வாணியம்பாடியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா்கள் 2 போ் ரயில் மோதி உயிரிழந்தனா். வாணியம்பாடி அடுத்த கோணமேடு பகுதியை சோ்ந்த ரவி (57). இவா் வியாழக்கிழமை விண்ணமங்கலம்- வாணியம்பாடி ர... மேலும் பார்க்க

குடும்ப உறுப்பினா்கள் நியாய விலைக் கடையில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வலியுறுத்தல்

குடும்ப அட்டைகளில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்கள் நியாய விலைக்கடைக்கு சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்ப... மேலும் பார்க்க