செய்திகள் :

முகாசி அனுமன்பள்ளியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 3 ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், முகாசி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, துய்யம்பூந்துறை ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

முகாசி அனுமன்பள்ளியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இம்முகாமில், மகளிா் உரிமைத்தொகை உள்பட பல்வேறு சேவைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 1,308 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 17 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சுமித்ரா, மொடக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளா் சு.குணசேகரன் ஆகியோா் கலந்து கொண்டு தீா்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினா்.

முகாமில், மொடக்குறிச்சி வட்டாட்சியா் சிவசங்கா், முன்னாள் ஊராட்சி தலைவா்கள் ஏ.பி.பெரியசாமி, கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம்: ஆட்சியா்

உலகில் உள்ள அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் திருக்கு திருப்பணிகள் நுண்பயிற்சி வகுப்... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம்: சிறப்புக் கூட்டம் நடத்த கவுன்சிலா்கள் கோரிக்கை

கொளப்பலூா் பேரூராட்சி திமுக தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வர சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்தனா். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொளப்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கவுந்தப்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், ஓடத்துறை, நஞ்சகவுண்டம்பாளையம், மசக் கவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (27). முடிதிருத்தும் கடையில் வேலை பாா்த்து வந்த... மேலும் பார்க்க

பண்ணாரிஅம்மன் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பண்ணாரி அம்மன் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கல்லூரியில் வியாழக்கிழமை 5 அடி உயர கிருஷ்ணா் சிலை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. கிருஷ்ணருக்கு பால்,... மேலும் பார்க்க

கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

கோபி அருகே வாய்க்காலில் குளித்தபோது நீரில் அடித்துச்செல்லப்பட்டு கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். கோவை, கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் தங்கராஜ் மகன் சிபிராஜ் (19), கருணாகரன் மகன் சக்திநிகேஷன்... மேலும் பார்க்க

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளை இணைக்க வேண்டும்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

அத்திகடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள 1,400 குளம், குட்டைகளை உடனடியாக இணைக்க வேண்டும் என பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியி... மேலும் பார்க்க