செய்திகள் :

யூதர்கள் என்பதால் பயணிகள் வெளியேற்றம்? ஸ்பெயின் விமான நிறுவனம் விளக்கம்!

post image

ஸ்பெயின் நாட்டின் விமானத்தில் இருந்து யூதர்கள் என்பதால் 44 குழந்தைகள் உள்பட 52 பயணிகள் வெளியேற்றப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டதற்கு, வூலிங் விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் வலேன்சியா நகரத்தில் இருந்து பாரீஸ்-க்கு, புறப்பட தயாரான வூலிங் நிறுவனத்துக்குச் சொந்தமான, விமானத்தில் இருந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 44 குழந்தைகள் உள்பட 52 பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் யூதர்கள் என்பதால் விமானத்திலிருந்து நீக்கப்பட்டதாக, இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மேலும், இஸ்ரேலிய அரசு அதிகாரிகளும் தங்களது சமூக வலைதளங்களில் இந்தக் குற்றச்சாட்டைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், அந்தப் பயணிகள் விமானத்தின் அவசரகால உபகரணங்களைச் சேதமாக்கியதுடன், பணியாளர்களின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு இடையூறு செய்ததால், விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வூலிங் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

“பயணிகளில் சிலர் இடையூறு விளைவிக்கும் நடத்தையில் ஈடுபட்டதுடன், மிகவும் மோதல் போக்கை கடைப்பிடித்து விமானத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்தனர். மேலும், பயணிகள் வெளியேற்றப்பட்டதற்கு அவர்களின் மதத்துடன் தொடர்புடையது என்ற கருத்துக்களை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், பணியாளர்களின் அறிவுறுத்தல்களை அவர்கள் தொடர்ந்து நிராகரித்ததினால் மட்டுமே, அவர்களை வெளியேற்ற விமானத்தின் கேப்டன் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சிரியா - சவுதி அரேபியா இடையில் ரூ. 52,000 கோடி முதலீடு ஒப்பந்தம்!

Vueling Airlines has issued an explanation for allegations that 52 passengers, including 44 children, were removed from a Spanish flight because they were Jewish.

இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர். இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வெள்... மேலும் பார்க்க

இலங்கை: 40 நாடுகளுக்கு இலவச விசா!

இலங்கைக்கு வருகை தரும் சுமார் 40 வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும், இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, தாய்லாந்து, மலே... மேலும் பார்க்க

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்: பதற்றமான சுழல்!

கம்போடியாவுடன் சண்டை தீவிரமடைந்துள்ளதால் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கிமிடையே புராதனக் கோவில் விவகாரத்தால் வியாழக்கிழமை(ஜூலை 24) சண்டை மூண்டு பிற பகுதிகளுக்கும் ... மேலும் பார்க்க

துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!

துருக்கியில், இ3 நாடுகள் (E3) மற்றும் ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை இன்று (ஜூலை 25) துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில், இ3 என்றழைக்கப்படும் ஜெர்மனி, பி... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் இனி அரசியல் பதிவுகளுக்கு கட்டுப்பாடு!

அரசியல் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களில் பதிவிட அந்நிறுவனம் தடை விதிக்கவுள்ளது.அமெரிக்காவைs சேர்ந்த மெட்டா நிறுவனம் தங்கள் சமூக ஊடக தளங்களில் (வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன... மேலும் பார்க்க

வியட்நாமில் பேருந்து விபத்து: குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

வியட்நாமில் பேருந்து கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 9 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் ஹனோயிலிருந்து டானாங்கிற்கு பேருந்து இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த பேர... மேலும் பார்க்க