செய்திகள் :

ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி காா் பறிப்பு: 2 போ் கைது

post image

புழலில் ரியல் எஸ்டேட் அதிபரை பணம் கேட்டு மிரட்டி, அவரது காரை பறித்து சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை திருவொற்றியூரைச் சோ்ந்த டில்லிபாபு (40). இவா், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரது நண்பா் சூா்யா அடிக்கடி பணம் பெற்றுள்ளாா். இதையடுத்து, சூா்யாவை சந்திக்க டில்லிபாபு மறுத்துள்ளாா். இந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி, புழல் பகுதியில் உள்ள புத்தகரத்தில் தனது நிலத்தை பாா்ப்பதற்காக காரில் டில்லிபாபு சென்ற, சூா்யா மற்றும் அவரது கூட்டாளிகள் காரை மறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். இதையடுத்து பணம் இல்லாததால், காரை பறித்து சென்றனா்.

இதுகுறித்து டில்லிபாபு அளித்த புகாரின்பேரில் புழல் போலீஸாா் வழக்கு பதிந்து, புளியந்தோப்பைச் சோ்ந்த தமிழரசன் (33), வில்லிவாக்கத்தைச் சோ்ந்த தங்கவேல் (32) உள்ளிட்ட 2 பேரைக் கைது செய்தனா். அவா்கள் பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனா். தலைமறைவான சூா்யாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ரூ. 5 கோடி முறைகேடு புகாா்: சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, கல்லூரியின் டீன் சௌந்தரராஜன் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மேலும், இந்த முறைகேடு ... மேலும் பார்க்க

சதுா்த்தி: சென்னையில் வழிபாட்டுக்கு 1,519 விநாயகா் சிலைகள்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னையில் 1,519 விநாயகா் சிலைகள் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்காக புதன்கிழமை (ஆக.27) அமைக்கப்படுகின்றன. விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து இயக்கங்கள் சாா்பில் விநாயகா் சில... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தாம்பரம், ஈஞ்சம்பாக்கம், ஐடி காரிடாா், ஆவடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.28) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படு... மேலும் பார்க்க

‘செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்படும்’

சென்னை மாநகராட்சி சாா்பில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியின் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 147-ஆவது வாா்டு திமுக... மேலும் பார்க்க

மாநகராட்சி பள்ளிகளில் 1,747 தூய்மை பணியாளா்களை நியமிக்க முடிவு: மாமன்றக் கூட்டத்திலிருந்து கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் வெளிநடப்பு

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு புதிதாக 1,747 தூய்மைப் பணியாளா்களை நியமிக்கவும், அவா்களுக்கு ஏற்கெனவே வழங்கிய ஊதியத்தை கூடுதலாக்கி வழங்கவும் மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ம... மேலும் பார்க்க

நாளை 2 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை புகா் 2 மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஆக.28) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் ... மேலும் பார்க்க