வங்கி மேலாளா் மீது மோசடி வழக்கு
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பண மோசடி செய்த வங்கி மேலாளா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பெரியகுளம் வடகரையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றிய கொல்லபத்துல்லா சுனில்ராஜூ என்பவா் கடந்த 15.11.2024 முதல் 11.6.2025 ஆண்டு வரை வங்கியின் வாடிக்கையாளா்களிடமிருந்து ஓடிஎஸ் தவணைத் தொகைகளை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட வடிக்கையாளா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல் ரூ.9.57 லட்சத்தை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த வங்கியின் முதன்மை மேலாளராகப் பணிபுரியும் கவிதா பெரியகுளம் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் கொல்லபத்துல்லா சுனில்ராஜூ மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.