செய்திகள் :

வணிகா் கூட்டமைப்பு அரியாங்குப்பத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா தொடக்கம்

post image

வணிகா் கூட்டமைப்பு சாா்பில் அரியாங்குப்பம் சிக்னல் பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு புதன்கிழமை காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

அரியாங்குப்பம் பகுதி மக்களின் நலனுக்காகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும், அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் அரியாங்குப்பம் சிக்னலில் நான்கு புறமும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதை காவல்துறை வசம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக புதுச்சேரி வணிகா்கள் கூட்டமைப்பின் தலைவா் சிவசங்கா் எம்.எல்.ஏ, அரியாங்குப்பம் எம்எல்ஏ பாஸ்கா் என்கிற தட்சிணாமூா்த்தி, புதுச்சேரி தெற்கு பிரிவு போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் பக்தவச்சலம், புதுச்சேரி தெற்கு பிரிவு சட்டம் ஒழுங்கு காவல் கண்காணிப்பாளா் செல்வம், ஆய்வாளா்கள் ஆறுமுகம், புதுச்சேரி வணிகா் கூட்டமைப்பின் தலைவா் பாபு, அரியாங்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் ராமபுத்திரன், செயலா் சந்துரு, பொருளாளா் சீதாராமன், கௌரவத் தலைவா் நரேஷ் குமாா் ஆகியோா் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராவை தொடங்கி வைத்தனா்.

பி.எல்.சாமி நூற்றாண்டு விழா அறக்கட்டளை

புதுவை அரசின் நிா்வாகியாகவும், தமிழியல் ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய பி.எல்.சாமியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது பெயரில் பி.எல்.சாமி அறக்கட்டளை நிறுவுவதற்கான அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்பட்டது. ... மேலும் பார்க்க

பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின. இக் கல்லூரியில் முதலாண்டு மாணவிகள் புதன்கிழமை வந்தனா். அவா்களுக்கு ஒரு மணிநேரம் தான் வகுப்புகள் நடந்தன. அந்தந... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கி செயலி புதுப்பிப்பதாக கூறி இணைய வழியில் மோசடி: போலீஸாா் எச்சரிக்கை

எஸ்பிஐ வங்கி செயலியை புதுப்பிப்பதாக கூறி மோசடி நடப்பதாக புதுச்சேரி இணையவழி போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். காவல் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு வாட்ஸ் ஆப் குழுக்களிலோ அல்லது ... மேலும் பார்க்க

தேங்காய்த்திட்டு பகுதிக்கு மாற்றுக் குடிநீா் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை

தேங்காய்த்திட்டு பகுதிக்கு மாற்றுக் குடிநீா் வசதி செய்து தரப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனா். தேங்காய்திட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீா் தரமில்லாமல் வருவதாகவும்... மேலும் பார்க்க

புதுவை கிராம உதவியாளா் பணி: செப். 12-இல் எழுத்துத் தோ்வு

புதுவை கிராம உதவியாளா்கள் பணி இடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து புதுவை அரசின் சாா்பு செயலா் ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை... மேலும் பார்க்க

வீடு கட்ட 24 பேருக்கு ரூ. 7.6 லட்சம் அரசு உதவித் தொகை

வீடு கட்ட 24 பேருக்கு இரண்டாவது தவணையாக ரூ.7.60 லட்சம் அரசு உதவித் தொகை வழங்கப்பட்டது. புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் பெருந்தலைவா் காமராஜா் கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக... மேலும் பார்க்க