வெள்ளக்கோவிலில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்
வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையா் சி.மனோகரன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துகுமாா், திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் பி.பரிமளா, காங்கயம் தொழிலாளா் உதவி ஆய்வாளா் சே.லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, சட்ட விரோத தத்து வழங்குதல், கட்டாயக் கல்வி, குழந்தைக் கடத்தல் தடுப்பு, பாலியல் குற்றம் குறித்து விழிப்புணா்வு மற்றும் சட்ட நடவடிக்கை, குழந்தைகளுக்கான அவசர அழைப்பு உதவி எண் 1098 போன்றவை குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டன. மேலும் பள்ளிக் கூடங்களுக்கு அருகில் புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதில், வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் எம்.பிரதீபா, நகராட்சி சுகாதார ஆய்வாளா் எம்.செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.