செய்திகள் :

``ஆதாரும், ரேஷன் கார்டும் இந்திய குடிமகன் என்பதற்கான சான்றுகள் அல்ல'' - தேர்தல் ஆணையம் பதில்!

post image

பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வரும் நிலையில், "ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டு ஆகிய இரண்டு ஆவணங்களையும் வாக்காளர் தகுதிக்கான சான்றுகளாக கருத முடியாது" என உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 326-ல் குறிப்பிட்டுள்ள தகுதிகளை ஆதார் மற்றும் ரேஷன் அட்டை ஆகிய இரண்டு ஆவணங்களும் பூர்த்தி செய்யத் தவறிவிட்டதால், அவற்றை சான்றாவணமாக கருத இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதார் கார்டு
ஆதார் கார்டு

பீகார் வாக்காளர் பட்டியல் வழக்கில் விளக்கம் தெரிவித்த தேர்தல் ஆணையம், "ஆதார் என்பது ஒரு நபரின் அடையாளச் சான்றாக மட்டுமே இருக்கிறது. ஏதாவது திட்டத்தால் பயன்பெறுவதற்கு ஆதார் அட்டையை அடையாளமாக பயன்படுத்தலாம். ஆனால், அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 326 இன் படி, ஒருவர் தகுதியைச் சரிபார்க்க ஆதாரை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் உள்ளன.

மேலும், கணக்கீட்டுப் படிவத்தில் வழங்கப்பட்ட 11 ஆவணங்களின் பட்டியலில் ஆதார் சேர்க்கப்படவில்லை. ஆதாரை பயன்படுத்தி அடையாளத்தை நிரூபிக்க இயலும். ஆனால், ஆதாரை வைத்து ஒருவர் குடியுரிமையை உறுதிப்படுத்த இயலாது.

பீகாரில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950இன் பிரிவு 23(4) இன் படி குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்காக மட்டும் அடையாளமாக பயன்படுத்த ஆதார் எண்களையும் தேர்தல் ஆணையம் சேகரித்து வருகிறது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அதிகாரிகளால் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது. போலி மற்றும் தற்காலிக ரேஷன் அட்டைகளும் ஆங்காங்கே புழக்கத்தில் உள்ள காரணத்தால், ரேஷன் கார்டுகளின் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது.

Ration Card | ரேஷன் கார்டு

கணக்கீட்டுப் படிவத்தில் வழங்கப்பட்ட 11 ஆவணங்களின் பட்டியலில் ரேஷன் கார்டுகளும் இல்லை. ஆகவே ரேஷன் கார்டுகளையும் முக்கிய சான்றாவணமாக கருத இயலாது.

ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை துணை சான்று ஆவணங்களாக மட்டுமே பயன்படுத்த முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் இணைப்பதற்கு முக்கிய சான்றாவணமாக ஆதார் மற்றும் ரேஷன் அட்டை ஆகிய ஆவணங்களை பயன்படுத்த இயலாது. வாக்காளர் பட்டியலிலிருந்து தகுதியுள்ள எந்த வாக்காளரும் விடுபட்டுவிட கூடாது என்பதை உறுதி செய்வே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது.

கோவை: பேரூர் கோயிலில் ஆகம விதிகளை மீறி விஐபி தரிசனம் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாண்டியராஜன்!

சென்னை கொளத்தூர் காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் பாண்டியராஜன். அண்மையில் திருமலா பால் நிறுவனம் ஊழியர் தற்கொலை வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டில் பாண்டியராஜன் காத்திருப்போர் பட்டியல... மேலும் பார்க்க

"குரூப் 4 தேர்வில் எந்தக் குளறுபடியும் நடக்கவில்லை; 3 மாதங்களில்..." - TNPSC விளக்கம்!

சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்துவிட்டு உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்... மேலும் பார்க்க

Pawan: பவன் கல்யாண் படத்தின் பிரீமியர் ஷோவிற்கு அனுமதி; கூட்ட நெரிசல் ஆபத்து; வெடிக்கும் சர்ச்சைகள்!

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருந்த பவன் கல்யாண், அரசியலில் காலடி எடுத்து வைத்து தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.சினிமாவில் இருந்து ஓய்வு பெறாமல் துண... மேலும் பார்க்க

ஏமன் கொலை வழக்கு: நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்தா? - வெளியாகும் தகவலின் பின்னணி என்ன?

ஏமன் நாட்டைச் சேர்ந்த மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் அந்நாட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி மரண தண்டனைக்குள்ளான கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, ஜூலை 16-ம் தேதி தூக்கிலிடப்படுவதாக இருந்தது.மத்திய அரசு தரப்பிலிருந... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: "நானும் கலெக்டர் ஆவேன்" - கனவைச் சொன்ன சிறுமி; நெகிழ வைத்த கலெக்டர்; என்ன நடந்தது?

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மணியம்பட்டி மலைக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி திஷியா(8). இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறோம்.பெற்றோரை இழந்த நிலையில்,... மேலும் பார்க்க

விருதுநகர்: ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகள்; தற்காலிகமாக மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் 680 பட்டாசுத் தொழிற்சாலைகள், மாவட்ட வருவாய் அலுவலர் பிரிவின் கீழ் 400 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 1080 பட்டாசு... மேலும் பார்க்க