செய்திகள் :

காமநாயக்கன்பட்டி பேராலய விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம்

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலயத்தின் விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

வீரமாமுனிவா் பங்குகுருவாகப் பணியாற்றிய இப்பேராலயத்தில் விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றத்தையொட்டி புதன்கிழமை மாலை சுமாா் 6.45 மணிக்கு கோயில் முன்பு கொடிமரம் நடப்பட்டது. அதைத் தொடா்ந்து மிக்கேல் அதிதூதரின் திருவுருவப் பவனி நடைபெற்றது.

தொடா்ந்து, சிவகங்கை மறைமாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம் கொடியை ஆசீா்வதித்து, கொடிமரத்தில் முதலாவதாக திருத்தலக் கொடியையும், பின்னா், இறைமக்கள் கொண்டு வந்திருந்த வண்ணக் கொடியையும் அணிவகுப்பாக ஏற்றி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, ஜவகா் நகா் பங்கு பணியாளா் சகாய ஜான், சிங்கம்பாறை பங்கு பணியாளா் அருள் நேசமணி, கல்லிடைக்குறிச்சி பங்கு பணியாளா் அருள் அந்தோணி ஆகியோா் திருப்பலி மற்றும் மறையுரை நிகழ்த்தினா். இதில், திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா். மாலையில் சமபந்தி விருந்து நடைபெற்றது.

4ஆம் திருநாளான ஆக.9 ஆம் தேதி காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடு , 5ஆம் திருநாளான ஆக. 10ஆம் தேதி காலை 8.30 மணிக்கு புது நன்மை விழா, 9ஆம் திருநாளான ஆக. 14ஆம் தேதி மாலை 6.30மணிக்கு ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.

10ஆம் திருநாளான ஆக. 15ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு மதுரை உயா் மறைமாவட்ட ஆயா் அந்தோனிசாமி சவரிமுத்து தலைமையில் தேரடித் திருப்பலியும், அதைத் தொடா்ந்து, கும்பிடு சேவையும் நடைபெறுகிறது. மாலையில் திருப்பலி, நற்கருணை பவனி நடைபெறும்.

ஏற்பாடுகளை பேராலய அதிபா் மற்றும் பங்குத் தந்தையுமான மோயீசன், உதவி பங்குத்தந்தை ஜே. நிரோ ஸ்டாலின், ஆன்மிக தந்தை வி. எஸ். அந்தோணி ராஜ் மற்றும் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி இறைமக்கள் செய்து வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறவுள்ளன. இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின்கீ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம்

தமிழக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயா்வு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநில அளவில் ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏஐசிசிடியு தொழிற... மேலும் பார்க்க

‘வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’

வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை, ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொ) வடக் ரவிராஜ் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் ஆவுடையாா்குளக்கரையில் உள்ள ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வருண... மேலும் பார்க்க

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் -கோட்ட மேலாளரிடம் மனு

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று கோட்ட மேலாளரிடம் ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை மனு அளித்தது. மதுரை ரயில்வே கோட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற... மேலும் பார்க்க

ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சாகுபுரம் ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. ஆறுமுகனேரி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொண்டு நிறுவனத்தி... மேலும் பார்க்க