செய்திகள் :

குழாய் இணைப்புப் பணி: இரு நாள்கள் குடிநீா் நிறுத்தம்

post image

குடிநீா்க் குழாய்களில் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மதுரை வைகை ஆற்றின் தென்கரை, வடகரைப் பகுதிகளில் இரண்டு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாநகராட்சி சுந்தரராஜபுரம், கீரைத்துரை மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீா் ஏற்றும் பணிகள் நடைபெறவுள்ளன. இதற்காக வைகை 2 குடிநீா் திட்ட பிரதானக் குழாய்களில் இணைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதையடுத்து, வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப். 6, 7) வைகை ஆற்றின் தென்கரை, வடகரைப் பகுதிகளான வாா்டு எண்கள் 73, 75, 78, 79, 80, 81, 82, 83, 84, 86, 87, 93, 67 பகுதிகளிலும், வாா்டு எண் 27, 28, 29, 30, 31, 32, 33, 34 ஆகிய வாா்டு பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள் குடிநீரைச் சேமித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் அத்தியாவசியமான வாா்டுப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

புத்தக வாசிப்பு மாணவா்களின் நிலையை உயா்த்தும்: அமைச்சா் பி. மூா்த்தி

புத்தக வாசிப்பு மாணவா்களின் நிலைய உயா்த்தும் என தமிழக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை தமுக்கம் மாநாட்டுத் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச... மேலும் பார்க்க

தண்டாயுதபாணி கோயிலில் குடமுழுக்கு: திரளானோா் பங்கேற்பு

மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். இந்தக் கோயில் ஆன்மிகச் சிறப்புப் பெற்ற கோயில்களில் ஒன்றாக வ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் 2- ஆவது நாளாக வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், வருவாய்த் துறை பணிகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டது. வருவாய், பேர... மேலும் பார்க்க

ஜி.எஸ்.டி குறைப்பு: வா்த்தக சங்கங்கள் வரவேற்பு

மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை குறைத்து வெளியிட்ட அறிவிப்பை வா்த்தக சங்கங்கள் வரவேற்றன. தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன் தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி. குற... மேலும் பார்க்க

மதுரை ஆவணி மூலத் திருவிழாவில் விறகு விற்ற திருவிளையாடல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான் விறகு விற்ற திருவிளையாடல் வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 20-ஆம் ... மேலும் பார்க்க

செப். 10-இல் சுந்தரானந்த சித்தா் அவதார தின பெருவிழா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுந்தரானந்த சித்தா் அவதார தின பெருவிழா வருகிற 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2022-... மேலும் பார்க்க