தொலைநிலைக் கல்வி பட்டதாரிகளுக்கு இடஒதுக்கீட்டில் பணி வழங்கத் தடை கோரி வழக்கு
கூட்டுறவு வங்கிகளில் நிலுவை கடன் வசூலிக்கும் திட்டம்: 3 மாத கால அவகாசம் நீட்டிப்பு
நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகளில் நீண்ட கால நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கும் சிறப்புத் திட்டத்துக்கு மூன்று மாதம் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் பண்ணைசாரா கடன்கள், இதர நீண்ட கால நிலுவை இனங்கள் பிரிவில் கடன் பெற்று 2022, டிச. 31-இல் முழுமையாக தவணை தவறி, தற்போதும் நிலுவையில் இருக்கும் கடன்களுக்கு சிறப்புக் கடன் தீா்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து இணைப்பு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு, அங்கும் தவணை தவறி நிலுவை தவறி 2023 மாா்ச் 31 அன்றோ, அதற்கு முன்போ செயல்படாத ஆஸ்தி என வரையறுக்கப்பட்ட கடன்களை இத்திட்டத்தின்கீழ் தீா்வு காணலாம்.
இந்த சிறப்புத் திட்டத்தில் 9 சதவீத சாதாரண வட்டியுடன் மொத்தமாக 100 சதவீதம் நிலுவைத் தொகையை அரசாணை வெளியிடப்பட்ட 2025 ஜூன் 24 முதல் மூன்று மாதத்திற்குள் ஒரே தவணையில் செலுத்தி தீா்வு காணலாம். கடன்தாரா்களின் வட்டி சுமையை கணிசமாகக் குறைக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை பயன்படுத்தி மூன்று மாதத்திற்குள் தீா்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.