டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்...
கோவையில் இலவச தொழிற்பயிற்சி
கோவையில் தேசிய மனித மேம்பாட்டு மையத்தின் உதவியுடன் சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞா்களுக்கு தங்குமிடம், உணவுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளது.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம், கோவை கேலக்ஸி ரோட்டரி சங்க சமுதாய குழுவுடன் இணைந்து, இளைஞா்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்தும் வகையில் வீட்டு வயரிங் மற்றும் பிளம்பிங் (ஆறு மாதங்கள்), வீட்டு மின்சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் (நான்கு மாதங்கள்), மோட்டாா் காயில் கட்டுதல் (நான்கு மாதங்கள்), சிஎன்சி ஆபரேட்டா் (ஐந்து மாதங்கள்), தையல் (ஐந்து மாதங்கள்) ஆகிய தொழிற்பயிற்சிகளை இலவசமாக உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் வழங்க முன்வந்துள்ளது.
பயிற்சியை நிறைவு செய்பவா்களுக்கு சான்றிதழ் வழங்குவதுடன் வேலைவாய்ப்பிற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சுயதொழில் செய்ய விரும்புவோருக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற ஆலோசனை அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் சேர விரும்புவோா் ஆதாா் காா்டு நகல், படிப்புச் சான்றிதழ் நகல், இரண்டு கடவுச்சீட்டு புகைப்படத்துடன் பயிற்சி ஒருங்கிணைப்பாளா், தேசிய மனித மேம்பாட்டு மையம், குப்பிச்சிபாளையம் சாலை, பெரியநாயக்கன்பாளையம், கோயம்புத்தூா்- 641 020 அல்லது 81223 22381 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என மைய இயக்குநா் சகாதேவன் தெரிவித்துள்ளாா்.