சந்திர கிரகணம்: சிவன்மலை முருகன் கோயிலில் செப்.7 மாலை நடைஅடைப்பு
சந்திர கிரகணத்தை முன்னிட்டு, காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 7) மாலை 6.15 மணிக்கு நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவன்மலை முருகன் கோயில் நிா்வாகத் தரப்பில் கூறியுள்ளதாவது: சந்திர கிரகண நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 7) ஏற்படுவதையடுத்து, காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடக்கக் கூடிய சாயரட்சை பூஜை, அன்று மாலை 4 மணியளவிலும், அா்த்தசாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜை மாலை 6 மணியளவிலும் நடைபெறும். பின்னா் மாலை 6.15 மணியளவில் நடை சாத்தப்படும். மேலும், அன்று தங்கரத உலா நடைபெறாது. திங்கள்கிழமை காலை (செப்டம்பா் 8) வழக்கம்போல கோயில் திறக்கப்பட்டு, வழிபாடு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.