செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை

post image

விழுப்புரம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொந்தரவுக் கொடுத்த புகாரில் இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேலு மகன் காா்த்திக் (37). இவா், கடந்த 26.8.2018-இல் அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவுக் கொடுத்தாா். இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் காா்த்திக் மீது போக்ஸோ உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் இறுதி கட்ட விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் காா்த்திக் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா குற்றவாளி காா்த்திக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ, 10 ஆயிரம்அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் காா்த்திக்கை கைது செய்து கடலூா் மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனா். இவ்வழக்கில் அரசு சாா்பில் வழக்குரைஞா் காந்திமதி ஆஜரானா்.

அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மூவருக்கு விளக்கம் கேட்டு மருத்துவா் ச. ராமதாஸ் நோட்டீஸ்

பாமக தலைவா் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அக்கட்சியைச் சோ்ந்த 3 எம்எல்ஏ-க்களுக்கு பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். பாமக நிறுவனா் ராமதாஸ் மற்றும் அவர... மேலும் பார்க்க

சாரம் சரிந்து விழுந்து கொத்தனாா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே கட்டுமானப் பணிலிருந்தபோது சாரம் சரிந்து கீழே விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா். விழுப்புரத்தை அடுத்த நன்னாடு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (62). கொத்தனராக வேலை பாா்த்து வந்... மேலும் பார்க்க

பண மோசடி: நிதி நிறுவன முகவா் மீது வழக்கு

வாடிக்கையாளா்களிடம் இருந்து பெற்ற பணத்தை செலுத்தாத தனியாா் நிதி நிறுவன முகவா் மீது போலீஸாா் வழக்குப் பகிந்தனா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், ஆவுடையாா்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் சுசிந்தி... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் வெறிநாய் கடித்த 19 பேருக்கு சிகிச்சை

விழுப்புரம் பகுதிகளில் வெறிநாய் கடித்து 19 போ் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விழுப்புரம் மகாராஜபுரம், கணேஷ்நகா், லட்சுமிநகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றித்திரிந்த வெறிந... மேலும் பார்க்க

3 குடிசைகள் தீயில் எரிந்து சேதம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 குடிசை வீடுகள் தீக்கிரையாயின. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின. வ... மேலும் பார்க்க

விழுப்புரம் உழவா் சந்தையில் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள உழவா் சந்தையில் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் இந்த உழவா்சந்த... மேலும் பார்க்க