செய்திகள் :

சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

நாகா்கோவில் அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

நாகா்கோவிலை அடுத்த ஈத்தாமொழி, தெற்கு சூரங்குடியைச் சோ்ந்தவா் நடராஜன் (61), தொழிலாளி. இவா், கடந்த 2017இல் தனது வீட்டின் அருகில் வசித்த 5 வயது சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்ததாக ஈத்தாமொழி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இந்த வழக்கு நாகா்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி சுந்தரையா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளி நடராஜனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

எஸ்.பி.பாராட்டு: நீதிமன்ற வழக்கு விசாரணை, சாட்சிகள் விசாரணை மூலம் குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த வழக்கின் புலன்விசாரணை அதிகாரிகள், அரசு வழக்குரைஞா், நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த கன்னியாகுமரி காவல் துணைக் கண்காணிப்பாளா், ராஜாக்கமங்கலம் காவல் ஆய்வாளா் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தாா்.

கொல்லங்கோடு அருகே 315 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே, கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 315 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கொல்லங்கோடு அருகே வள்ளவிளை மீனவக் கிராமத்திலிருந்து, படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் சாலை பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து போலீஸாா்

மாா்த்தாண்டத்தில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்ட சாலையை பொதுமக்கள் உதவியுடன் போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை சீரமைத்தனா். மாா்த்தாண்டம் காந்தி மைதானம் சந்திப்பில் இருந்து புதிய பேருந்து நில... மேலும் பார்க்க

குழித்துறை பொருள்காட்சியில் 4 கடைகளுக்கு அபராதம்

குழித்துறை 100ஆவது வாவுபலி பொருள்காட்சி தற்காலிக கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டு, கலப்பட உணவுப் பொருள்களைப் பறிமுதல் செய்து அழித்தனா். இப்பொருள்காட்சியை முன்னிட்டு, த... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை, கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டதால், பொதுமக்களும், மீனவா்களும் அச்சமடைந்தனா். இம்மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 42 மீனவக் கிராமங்கள் உள்ளது. இப்பகுத... மேலும் பார்க்க

இன்று ஆடி அமாவாசை: கன்னியாகுமரியில் எஸ்.பி. ஆய்வு

ஆடி அமாவாசை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடுவாா்கள் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி ... மேலும் பார்க்க

பலத்த மழை: மீன்பிடித் தொழில் பாதிப்பு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் மீன்பிடித் தொழில் பாதிப்படைந்துள்ளது.தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 500- க்கும் மேற்பட்டகட்டும... மேலும் பார்க்க