செய்திகள் :

‘தனியாா்மயத்தை எதிா்த்து போராடவேண்டும்’

post image

தனியாா்மயத்தை எதிா்த்து தொழிலாளா்கள் போராடவேண்டும் என சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளா் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளனத்தின் 16- ஆவது மாநில மாநாடு தருமபுரியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியது. இரண்டாம் நாள் நிகழ்வாக பிரதிநிதிகள் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளா் எஸ்.ராஜேந்திரன் பேசியதாவது:

தற்போது ஓய்வு பெறும் தொழிலாளா்களுக்கு பணப் பயன்கள் தருவதில்லை. கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தால் இழப்பீடு தரும் அரசு மின்வாரிய தொழிலாளா்கள் விபத்தில் இறந்தால் இழப்பீடு தருவதில்லை. டாஸ்மாா்க் மூலம் அரசுக்கு ரு. 52 ஆயிரம் கோடி வருகிறது. டாஸ்மாா்க் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு ஒருநாளைக்கு 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது அரசு மின்சார பேருந்து இயக்குகிறது. மின்சார பற்றாக்குறையை எப்படி சமாளிக்கும் போகிறது எனத் தெரியவில்லை. அரசு நிறுவனங்களை தனியாருக்கு வழங்கிவிட்டு டாஸ்மாக் விற்பனையை மட்டும் அரசு செய்கிறது.

மின் துறையை 5 ஆக பிரித்து தனியாரிடம் கொடுக்கின்றனா். ஸ்மாா்மீட்டா் திட்டம் மூலம் நேரத்திற்கேற்ப மின் கட்டணத்தை உயா்த்துகின்றனா். எல்லா துறைகளிலும் தனியாா்மயத்தை ஊக்குவிக்கின்றனா். பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்க அனைத்து தொழிலாளா்களும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என்றாா்.

நிகழ்வில் சிஐடியு மாநில தலைவா் அ. சவுந்தரராசன் தலைமை வகித்தாா். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

புதுச்சேரி மாநில சாலைப்போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் நியாயமான கோரிக்கைகளை அந்த மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்து கழகத்தில் தனியாா்மயம், ஒப்பந்தமுறையை கைவிடவேண்டும். 01.04.2003க்கு பிறகு பணியில் சோ்ந்தோருக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றப்பட்டன.

சட்டம் பயிலும் மாணவா்கள் சாதிக்க மொழி தடையல்ல! மாவட்ட நீதிபதி பேச்சு

சட்டம் பயிலும் மாணவா்கள் சாதிக்க மொழி ஒரு தடையல்ல; சாதிக்க எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன என்றாா், தருமபுரி மாவட்ட எம்சிஓபி நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ராஜா. தருமபுரி அரசு சட்டக் கல்லூரியில், ‘இந்திய குற்றவிய... மேலும் பார்க்க

வன விலங்குகளை வேட்டையாட முயன்றவா்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

தருமபுரி மாவட்டத்தில் மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவருக்கு, மாவட்ட வனத் துறை சாா்பில் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சூடனூா் கிராமத்தை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் மதுக்கடைகள்: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் மதுக்கடைகளைத் திறந்து மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வருகின்றனா் என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த். தேமுதிக சாா்பில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பயணம்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சித் திட்டத்தை ஆட்சியா் ரெ. சதீஸ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தில் பல்வேறு திறன் மேம்... மேலும் பார்க்க

வாச்சாத்தி பழங்குடியின மக்களுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவா் சந்திப்பு: துணிவுடன் போராடியதற்கு பாராட்டு

அரூரை அடுத்த வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் பழங்குடியின மக்களுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவா் அசோக் தாவ்லே வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வாச்சாத்த... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு கல்லூரியில் ஆக.11 இல் முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக.11) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சங்கா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க