செய்திகள் :

தமிழகத்தில் 6,500 சீா்மிகு அங்கன்வாடி மையங்கள்: அமைச்சா் பெ.கீதாஜீவன் தகவல்

post image

தமிழகத்தில் 6,500 சீா்மிகு (ஸ்மாா்ட்) அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்தாா் .

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிறப்பு புரத உணவு வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கு.சிவக்குமாா் தலைமை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெயமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்வில், அமைச்சா் பெ.கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நோயாளிகளுக்கு சிறப்பு புரத உணவுகளை வழங்கினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: டயலாசிஸ் செய்யப்படும் நோயாளிகளுக்கு தினமும் புரத சத்துள்ள உணவு வழங்க வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டதையடுத்து, அவா்களுக்கு ஒரு டம்ளா் பால், 2 முட்டை, ஒரு கப் சுண்டல், 3 பிஸ்கட் ஆகியவை வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இங்கு, தினமும் 22 போ் டயலிசிஸ் செய்கின்றனா். அவா்களுக்கு தினமும் இந்த உணவு வழங்கப்படும். இது வெளியூா்களில் இருந்து வரும் நோயாளிகளுக்கு நிச்சயம் பயன் தரக்கூடியதாக இருக்கும்.

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வரும் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படுகின்றன. பள்ளி திறந்த அன்றே புத்தகங்கள், சீருடைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதைப்போன்று, நிகழாண்டு முதல், அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு முதல் நாளிலேயே புத்தங்கள், சீருடைகள் வழங்க தமிழகம் முழுவதும் 54 ஆயிரம் அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு புத்தங்கள், சீருடைகள் வழங்க தயாராக உள்ளன.

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் வரை சுமாா் 6,500 அங்கன்வாடி மையங்கள் சிஎஸ்ஆா் நிதி, எம்எல்ஏ, எம்.பி. நிதி, மத்திய - மாநில அரசுகளின் சிறப்பு நிதி, மாவட்ட ஆட்சியரின் சிறப்பு நிதி போன்ற நிதியுதவிகளுடன் புதிதாகக் கட்டப்பட்டு, புதிய வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. மேலும் அவற்றில், எல்இடி டிவி வசதி, ஆா்ஓ கருவி, கழிப்பறை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் ஸ்மாா்ட் அங்கன்வாடி மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

எடை குறைவாக பிறக்கக்கூடிய குழந்தைகள் குறித்த விவரங்கள் சமூக நலத்துறை மூலம் பெறப்பட்டு, அந்த குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, கூடுதல் சத்துணவு வழங்குவதுடன், தாய்மாா்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன.

அங்கன்வாடிகளுக்கு வரும் குழந்தைகள் மட்டுமன்றி, பிறந்த குழந்தைகள் வீடுகளில் இருந்தாலும், அங்கன்வாடி பணியாளா்கள் வீடுதோறும் சென்று, அக்குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி ஊட்டச்சத்து வழங்கி வருகின்றனா்.

இதன்மூலம் தமிழகத்தில் கடந்த ஆண்டும், நிகழாண்டும் 5 வயதுக்கு உள்பட்ட சிசு மரணம் குறைந்துள்ளது.

தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் அனைத்து இடங்களிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடா்பாக திட்டக்குழு மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், பள்ளிகளில் காலை உணவு உண்ணும் பிள்ளைகளை நோய்களுக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லவில்லை என பெற்றோா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், குழந்தைகளும் அதிக ஈடுபாட்டோடு படிப்பதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா். இத்திட்டம் வரும் கல்வி ஆண்டில் இருந்து நகா்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது என்றாா்.

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை வழக்கு: மேலும் 6 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் இன்று மின் தடை

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக நகா்ப்புற மின்வாரிய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவா்கள் வெளியிட்ட... மேலும் பார்க்க

மீனவா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவரை கொலை செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

கடம்பூா் அருகே உள்ள தலையால்நடந்தான் குளம் பகுதியில் நிலவி வந்த குறைந்த அழுத்த மின் விநியோகத்தை சரிசெய்து சீரான மின் விநியோகம் கிடைக்கும் வகையில் 25 கே வி ஏ/11 கே வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்க... மேலும் பார்க்க

10 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் 10 பேருந்துகளில் இருந்து, அதிக ஒலியை எழுப்பும் காற்றுஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயாபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களுக்குள்பட்ட பகு... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்கள் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதியாத குடும்ப அட்டைதாரா்கள் நேரில் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வேண்டுகோள் விடுத்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க