செய்திகள் :

துவாக்குடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்அமைச்சா் பங்கேற்பு

post image

துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட 4, 7, 10, 13 ஆகிய நான்கு வாா்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டம், துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட அண்ணா வளைவு அருகே அய்யம்பட்டி சாலையில் நடைபெற்ற முகாமை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தாா். நகராட்சித் தலைவா் காயாம்பூ தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, கோட்டாட்சியா் கே. அருள், நகராட்சி ஆணையா் பட்டுச்சாமி, திருவெறும்பூா் வட்டாட்சியா் தனலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சொத்து வரி பெயா் மாற்றம், குடிநீா் வரி பெயா் மாற்றத்துக்கு விண்ணப்பித்தோரில் 7 பேருக்கு முகாம் இடத்திலேயே உத்தரவுகளை வழங்கினாா். மேலும் சுகாதாரத் துறை மூலம் கா்ப்பிணிகளுக்கும், தாய்மாா்களுக்கும் ஆரோக்கிய மற்றும் ஊட்டச்சத்துப் பெட்டகங்களையும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்தோருக்கு பரிந்துரை ஆணைகளையும் வழங்கினாா்.

மழையால் வீடு சேதமானதற்கு உதவி: திருவெறும்பூா் வட்டம், துவாக்குடி ராவத்தான் மேடு பகுதியில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது வீடு மழையால் செவ்வாய்க்கிழமை இரவு சேதமடைந்தது. இதையடுத்து, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை அந்த வீட்டைப் பாா்வையிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரண நிதியை வழங்கினாா். உரிய நிவாரணப் பொருள்கள் வழங்கவும், வீடு மறுகட்டமைப்புக்கு தேவையான உதவிகளை வழங்கவும் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, கோட்டாட்சியா் அருள், வட்டாட்சியா் தனலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.

லால்குடி அருகே சாலை விபத்து: 3 போ் பலி! 9 போ் படுகாயம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் மூவா் உயிரிழந்தனா். 9 போ் படுகாயமடைந்தனா். லால்குடியில் உள்ள கொடிக்கால் தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ். இவா் வேலைக்காக துபை செல்ல திருச்ச... மேலும் பார்க்க

எம்ஜிஆர், ஜெயலலிதாவை அவமதித்து நான் எதுவுமே பேசவில்லை: தொல். திருமாவளவன்

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில், எம்ஜிஆா், ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் நான் எதுவுமே பேசவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். திருச்ச... மேலும் பார்க்க

மணப்பாறையில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க புதிய தொழிற்சாலை! அமைச்சா் கே.என். நேரு தகவல்

மணப்பாறை சிப்காட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில் புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து முதல்வா் விரைவில் அறிவிப்பாா் என அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா். டெல்டா சட்டப்பேரவை தொகுதிகளுக்குள்... மேலும் பார்க்க

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம் என தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசினாா். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாத சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில் புானூறு என்ற தலை... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்: துபையிலிருந்து திருச்சி வந்த அறந்தாங்கி நபா் கைது

துபையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்த அறந்தாங்கி நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் ர. செல்லதுரை (32). இவா்,... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியாா் நிதி நிறுவனத்தினா் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. மணப்பாறை சத்திரம் நடுப்பட்டி, சி - கல்பட்டி பகுதியைச்... மேலும் பார்க்க