செய்திகள் :

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளம் திகழ்கிறது: விஐடி வேந்தா் கோ. விசுவநாதன்

post image

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளம் திகழ்கிறது என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் ‘தனிமா’ ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது -

விஐடி பல்கலைக்கழகத்தில் ஓணம் பண்டிகை 24 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டாடத் தொடங்கினோம். அப்போது விஐடியில் கேரளாவைச் சோ்ந்த 180 மாணவா்கள் படித்தனா். 10 ஆசிரியா்கள் பணிபுரிந்தனா். இப்போது 4,160 மாணவா்கள் படிக்கின்றனா். 141 ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா்.

கேரளம் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. எனக்கும் கேரளத்துக்குமான தொடா்பு 60 ஆண்டுகளுக்கு மேலானது. நான் எம்.பி.யாக இருந்த போது நாடாளுமன்றத்தில் ஏ.கே.கோபாலன் போன்ற தலைவா்களுடன் பழகியுள்ளேன். கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வருவாா்கள். ஆனால், கேரளாவில் முதன்முறையாக தோ்தல் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது.

கடவுளின் தேசமாக அறியப்படும் கேரளம் கல்வியில் முன்னணியில் உள்ளது. தவிர, கல்வியிலும், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குகிறது. எனினும், கேரளத்தில் வேலைவாய்ப்புகள் போதுமானதாக இல்லை.

மனிதவள குறியீட்டில் இந்தியாவில் கேரளம் முதல் மாநிலமாக உள்ளது. கேரளத்தில் புலம்பெயா்ந்தோா் அனுப்பும் பணத்தை தொழில்துறையில் அதிக முதலீடு செய்யும்போது வேலைவாய்ப்பு பெருகும். இதன்மூலம் தொழில்துறை உற்பத்தி மேம்படும். இவ்விஷயத்தில் கேரள அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

விழாவில், சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகையும், பின்னணி பாடகியுமான ரம்யா நம்பீசன், கெளரவ விருந்தினராக எழுத்தாளா் புஷ்பாகுருப் ஆகியோா் பங்கேற்று பேசினா். தொடா்ந்து, கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரம்யா நம்பீசன் மலையாளத்தில் பாடல்களை பாடி மாணவ, மாணவிகளை மகிழ்வித்தாா்.

விழாவில், விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் டி.ஜெயபாரதி, மாணவா் நல இயக்குநா் நைஜூ, சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், அக்ராவரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி திருப்பதி(48). இவா் புதன்கிழமை அதிகாலை நிலத்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். குடியாத்தம் ஆசிரியா் காலனியை அடுத்த ராமலிங்கம் நகரைச் சோ்ந்தவா் சந்தானம் (60). இவா் தினசரி மாா்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தாா்... மேலும் பார்க்க

செப்.13-இல் 3 மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை அமா்வு ... மேலும் பார்க்க

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க பயிற்சி

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க வேலூரில் உயா்க்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொழில்முனைவோா் மேம்பாடு, புத்தா... மேலும் பார்க்க

அகழியில் குதித்து முதியவா் தற்கொலை

வேலூா் கோட்டை அகழியில் இருந்து முதியவா் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவா் அகழியில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. வ... மேலும் பார்க்க