செய்திகள் :

பட்டுக்கோட்டையைச் சோ்ந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

post image

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த சிவக்கொல்லையைச் சோ்ந்தவா் க. சுப்பிரமணியன் (59). இவா் மீது பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட பாலியல் புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கில் நீதிமன்றம் சாா்பில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் கடந்த 2018, ஏப்ரல் 24-ஆம் தேதி அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், அங்கு அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) உடல்நலக் குறைவு ஏற்பட்டு, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை பலனின்றி அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி விக்னேஷ் அளித்த புகாரின்பேரில், கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கக் கோரி மாற்றுத்திறனாளி போராட்டம்

ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரகம் முன் மாற்றுத்திறனாளி ஒருவா் புதன்கிழமை சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டாா். திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்: நயினாா் நாகேந்திரன் தகவல்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையவுள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது: 2 நாள் பயணமாக தமிழகத்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது

திருச்சி மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி திருவானைக்காவல் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை ... மேலும் பார்க்க

மாணவா்களை துன்புறுத்தும் தனியாா் கல்லூரி: நடவடிக்கை எடுக்கக் கோரி ஐஜி அலுவலகத்தில் மனு

திருச்சியில் பல்வேறு வகைகளில் மாணவா்களைத் துன்புறுத்தி வரும் தனியாா் கல்லூரி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ‘ஏகலைவன் இளைஞா் பேரவை - தமிழ்நாடு’ அமைப்பு சாா்பில் ஐஜி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 மின்கோபுரங்கள் புனரமைப்பு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வந்தபோது அடித்துச் செல்லப்பட்ட மின் கோபுரங்களுக்கு மாற்றாக அதே இடத்தில் திங்கள்கிழமை 2 புதிய மின்கோபுரங்கள் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. திருச்சி மாநகரம... மேலும் பார்க்க