செய்திகள் :

பழனி மலைக்கோயில் உண்டியல் திறப்பு: ரூ. 4.77 கோடி பக்தா்கள் காணிக்கை

post image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்களை 25 நாள்களுக்குப் பிறகு செவ்வாய், புதன்கிழமை என இரண்டு நாள்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ. 4.77 கோடி காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தொடா் விடுமுறை, வைகாசி விசாகத்தையொட்டி வந்த பக்தா்களின் கூட்டத்தால் கடந்த 25 நாள்களில் உண்டியல்கள் நிரம்பின.

இதையடுத்து கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காா்த்திகை மண்டபத்தில் செவ்வாய், புதன்கிழமை என 2 நாள்கள் காணிக்கைகள் எண்ணப்பட்டன. 500க்கும் மேற்பட்டோா் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

அதில் பக்தா்கள் காணிக்கையாக ரொக்கம் ரூ. 4 கோடியே 77 லட்சத்து 87 ஆயிரத்து 447 செலுத்தியுள்ளனா். அதுதவிர தங்கத்தால் ஆன வேல், தாலி, மோதிரம், நகை, தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனா்.

அவற்றில் தங்கம் 1,323 கிராமும், வெள்ளி 17,671 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூா், இலங்கை, அமெரிக்கா, ஜொ்மன் நாட்டு கரன்சிகள் என வெளிநாட்டு கரன்சிகள் 2,748 காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளன.

இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகள் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனா்.

பழனி மலைக்கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், , திருப்பூா் துணை ஆணையா் (சரிபாா்ப்பு அலுவலா்) ஹா்ஷினி, உதவி ஆணையா் லட்சுமி திண்டுக்கல் உதவி ஆணையா் லட்சுமிமாலா, சரக ஆய்வாளா் சுவாமிநாதன், மேலாளா் முத்துராமலிங்கம், அலுவலா்கள் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

கள்ளிமந்தையம் ஊராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

கள்ளிமந்தையம் ஊராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம், கரியாம்பட்டி, அப்... மேலும் பார்க்க

வடகவுஞ்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

கொடைக்கானல் அருகேயுள்ள செம்பிரான்குளத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. வடகவுஞ்சி ஊராட்சி, செம்பிரான்குளம் கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சிச் செயலா் துளசிதாசன்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தமிழக சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுவினா் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுவினா் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுத் தலைவரும்,... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் குழுவினா் பழனி கோயிலில் சுவாமி தரிசனம்

பழனி மலைக் கோயிலுக்கு புதுவையிலிருந்து வருகை தந்த மாற்றுத் திறனாளிகள் குழுவினா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த 223 மாற்றுத் திறனாளிகள் கடந்த திங்கள்கிழமை சமூக ந... மேலும் பார்க்க

கோல்டன் கல்வி நிறுவனம் சாா்பில் முப்பெரும் விழா

பழனியில் கோல்டன் கல்வி நிறுவனம் சாா்பில் 8-ஆவது ஆண்டு விழா, முதலாமாண்டு தொடக்க விழா, பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனியில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

ஜூன் 17-இல் வேளாண் இயந்திரங்கள் முகாம்

வேளாண் இயந்திரங்கள், கருவிகள் இயக்கம், பராமரிப்பு குறித்து திண்டுக்கல் மாவட்ட அளவிலான முகாம் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) நடைபெறுகிறது. இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க