செய்திகள் :

பவானாவில் தொழிற்சாலையில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; ஒருவா் காயம்

post image

தில்லியின் பவானாவில் உள்ள ஒரு தொழில்துறை பிரிவில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் லேசான காயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆணையா் (வெளிப்புற வடக்கு) ஹரேஷ்வா் சுவாமி கூறியதாவது: பவானாவின் டிஎஸ்ஐஐடிசி, செக்டா்-1, தொழிற்சாலை எண் பி 86- இல் இந்தச் சம்பவம் நடந்தது. வெடி விபத்து பற்றிய தகவல் கிடைத்ததை அடுத்து, ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

தீயை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்களுடன் வீரா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். முதல் பாா்வையில் இது சிலிண்டா் அல்லது கம்ப்ரசா் வெடிப்பு என தெரிகிறது. இறந்தவா் உத்தர பிரதேசத்தின் பிஜ்னோா் மாவட்டத்தைச் சோ்ந்த நாஜிம் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்த அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தின் அசம்கரை வசிக்கும் அகிலேஷ் என்ற மற்றொரு தொழிலாளிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா்.

இந்த தொழிற்சாலை நஜீமின் தந்தை நிஜாமுதீன் (60) என்பவருக்குச் சொந்தமானது. அவா் இங்குள்ள பஸ்சிம் விஹாரைச் சோ்ந்தவா். இந்த விவகாரத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) தொடா்புடைய விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று காவல் துணை ஆணையா் ஹரேஷ்வா் சுவாமி தெரிவித்தாா்.

அரசு மருத்துவமனை அருகே குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை கவ்விச் சென்ற தெருநாய்: பஞ்சாப் அரசுக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

பஞ்சாப் மாநிலம், பட்டியாலா மாவட்டத்தில் உள்ள அரசு ராஜிந்திரா மருத்துவமனைக்கு அருகில், குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை தெருநாய் கவ்விச் சென்ாக கூறப்படும் சம்பவத்தை தாமாக முன்வந்து இந்திய தேசிய மனித ... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவதற்காக பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட பல செயல்பாடுகள் ஆகஸ்டு மாதம் நடைபெற்றன. காலை சிறப... மேலும் பார்க்க

யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா

யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா். தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க

பிடிப்பட்ட போதைப் பொருள்களை விற்கும் கும்பல்: 3 போ் கைது

தில்லி காவல்துறை ஒரு போதைப்பொருள்கள் விற்பனை.ை முறியடித்து, ஒரு விற்பனையாளா் மற்றும் ஒரு விநியோகஸ்தா் உள்பட 3 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 கிராமுக்கும் அதிகமான ஸ்மக்கை பறிமுதல் செய்ததாக அ... மேலும் பார்க்க

தேசிய மாணவா் படைக்கு தில்லியில் 12 நாள்கள் பயிற்சி முகாம்

தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 12 நாட்கள் நடைபெறும் தால் சைனிக் முகாமில் 1,546 மாணவா்கள் பங்கேற்க உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

2024-25இல் தில்லியின் உற்பத்தித் துறை வளா்ச்சி 3 மடங்கு அதிகம்: அறிக்கையில் தகவல்

‘2024-25 ஆம் ஆண்டில் தில்லியின் உற்பத்தித் துறை 11.9 சதவீத வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது தேசிய வளா்ச்சியான 4.1 சதவீதத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்’ என்று ஒரு அறிக்கையில் தெ... மேலும் பார்க்க