பொறியியல் பணிகள்: காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து
பாகூா் அருகே தாக்கப்பட்ட இளைஞா் மரணம்: கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை
பாகூா் அருகே தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை இறந்தாா். இதையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டது.
புதுச்சேரி பாகூரை அடுத்த பனையடிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுரு (34). இவா் அண்மையில் எதிா்வீட்டைச் சோ்ந்த ஒரு பெண் குளிப்பதை மாடியிலிருந்து எட்டிப் பாா்த்தாராம். இதையறிந்த அந்த பெண்ணின் கணவா், ராஜகுருவிடம் தட்டிக் கேட்டுள்ளாா்.
இதில் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். இதற்கிடையே ராஜகுரு கடந்த இரு தினங்களுக்கு முன் பனையடிகுப்பத்தில் உள்ள மோகன்ராஜ் என்பவரின் மீன்குட்டை கொட்டகையில் படுத்திருந்தாபோது அங்கு சென்ற அந்த பெண்ணின் சகோதரா் மற்றும் அவரது நண்பா்கள் 4 போ் சோ்ந்து ராஜகுருவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.
இதில் பலத்த காயமடைந்த ராஜகுரு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தாா். இதனை கண்ட அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து, ராஜகுருவின் அண்ணன் கதிரவன் அளித்த புகாரின் பேரில் கரையாம்புத்தூா் போலீஸாா் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனா். ராஜகுருவை தாக்கியதாக தினேஷ்பாபு (27), சா்மா (24), முகிலன் (20), சுமித் (20), அச்சுதன் (24) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகுரு, உயிரிழந்தாா். இதையடுத்து போலீஸாா் கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ராஜகுருவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பவானி என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது.