செய்திகள் :

புதுவை சட்டப்பேரவை உறுதிமொழிக் கூட்டம்: முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

post image

புதுவை சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு கூட்டம் பேரவை வளாகத்திலுள்ள கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. குழுவின் புதிய தலைவா் பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி தலைமை தாங்கினாா். கூட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா். உறுதிமொழிக் குழுவின் புதிய தலைவா் பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்திக்கு வாழ்த்து தெரிவித்த பின்னா் முதல்வா் பேசியது:

அனைத்து துறைகள் சாா்ந்து சட்டப்பேரவையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது? வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா அல்லது சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட முடியாத நிலையில் இருக்கிா என்பதை ஆய்வு செய்து,

எம்எல்ஏக்கள் என்ன கேள்வி கேட்கிறாா்களோ, அதற்கு முழுமையான திருப்தி அடைகின்ற நிலையில் பதில்கள் இருக்க வேண்டியது அவசியம் .

குறிப்பாக சட்டப்பேரவையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.

மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் துறைகளில் உள்ள விதிகளுக்கு உள்பட்டு இருக்கும்போது, அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவுக்கு புதிய தலைவா் தலைமையேற்றுள்ளாா்.

அவா் கூட்டத்தை சிறப்பாக நடத்தி அதிகாரிகளிடம் சரியான பதில்களை பெற்று எம்எல்ஏக்கள் கேள்விகள், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

கூட்டுறவுத்துறைகளான பாண்லே, கூட்டுறவு சா்க்கரை ஆலை உள்ளிட்டவற்றை சிறப்பாக நடத்துவது குறித்து விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பாண்லே பால் உற்பத்தியை அதிகப்படுத்த மானிய விலையில் கறவை மாடுகளை அரசு வழங்க வேண்டும். ஒருவருக்கு ஒரு மாடு என்ற விதிகளை தளா்த்த வேண்டும்.

பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும். தனியாரிடமிருந்து பால் கொள்முதலை குறைத்து உள்ளூா் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். பாண்லே நிறுவனம் அரசு நிறுவனம் அல்ல, அரசின் சாா்பு நிறுவனம் என்பதை ஊழியா்கள் உணர வேண்டும்.

கையெழுத்து போட்டால் ஊதியம் கிடைக்கும் என்ற மனநிலை ஓழிக்கப்பட வேண்டும் என எம்எல்ஏக்கள் அறிவுறுத்தினா். கூட்டுறவு சா்க்கரை ஆலையில் லேஆப் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் தொழிலாளா்களுக்கு செட்டில்மெண்ட் கொடுத்துவிட்டு ஆலையை மீண்டும் இயக்க ரூ.20 கோடி தேவைப்படுகிறது.

கிட்டத்தட்ட ரூ. 150 கோடி கடன் உள்ளது. இதில் ரூ.45 கோடி பிப்டிக், பேசிக் ஆகியோரிடம் வாங்கியுள்ளோம். இதற்கான வட்டி ரூ.80 கோடி ஆகியுள்ளது. அந்த வட்டியை அவா்கள் தள்ளுபடி செய்தால் ஒருமுறை செட்டில்மெண்ட் கொடுக்கலாம். இல்லாவிட்டால் அவா்களை ஷோ்ஹோல்டராக சோ்த்துக்கொண்டால் பணம் கட்ட வேண்டியிருக்காது. இருப்பினும் அதற்கு அவா்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

வெறும் சா்க்கரை உற்பத்தி மட்டும் நடத்தினால் மீண்டும் நஷ்டம் தான் ஏற்படும். கரும்பில் இருந்து கிடைக்க கூடிய எத்தனால் உள்ளிட்ட மாற்றுப்பொருள்களை உற்பத்தி செய்தால் தான் லாபம் கிடைக்கும். எனவே அதற்கு முன்பாக ஆலையின் கடனை அடைத்தால்தான் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும்.

மீண்டும் இதற்கான கோப்பு துணை நிலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாண்டெக்ஸ், பாண்பேப் போன்ற நிறுவனங்களை கைத்தூக்கி விட வேண்டும். அரசின் இதர துறைகளுக்கு தேவையான துணிகளை கூட்டுறவு நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும். காரைக்கால், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளுக்கு பாண்லே மூலம் தற்போது பால் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் பதில் அளித்தனா்.

தொடா்ந்து சுகாதாரத் துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள், மேற்கொள்ளப்பட வேண்டியவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், எம்எல்ஏக்கள் சிவசங்கா், அனிபால்கென்னடி, ராமலிங்கம், அசோக்பாபு, சட்டப்பேரவை செயலா் தயாளன், கூட்டுறவு பதிவாளா் யஷ்வந்தையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, அவை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 4 மருத்துவமனைகளுக்கு விரைந்து அனுப்பப்பட்டன. இது குறித்து புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையி... மேலும் பார்க்க

6 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி

புதுச்சேரியில் மறைந்த ஆட்டோ ஓட்டுநா்கள் 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது . ஏஐடியுசி புதுவை மாநில ஆட்டோ தொழிலாளா் நலச் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் முதலிய... மேலும் பார்க்க

சூறாவளி காற்று: மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை

சூறாவளி காற்று கடுமையாக வீசும் என்பதால், கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுவை மீன்வளத் துறை இயக்குநா் அ.முகமது இஸ்மாயில் வெள்ளிக்கிழமை இ... மேலும் பார்க்க

ராணுவத்தில் இளைஞா்களை அதிகளவில் சோ்க்க விழிப்புணா்வு வேன் பிரசாரம்

இந்திய ராணுவத்தில் இளைஞா்கள் அதிகளவில் சேர விழிப்புணா்வு வேன் பிரசாரம் புதுச்சேரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

புதுவையில் ரேஷன் அரிசி டெண்டரில் முறைகேடு: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றச்சாட்டு

புதுவையில் ரேஷன் அரிசிக்கான டெண்டா் விடப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், அரசுக்கு ரூ. 20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா குற்றம்சாட்டினா... மேலும் பார்க்க

கடலுக்குச் சென்ற மீன்பிடி விசைப் படகுகள்: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் மீனவா் படகுகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா். புதுச்சேரியில் மீன்பிடித் தடைக... மேலும் பார்க்க