செய்திகள் :

பெரம்பலூா்: 2 மாதங்களிலேயே மாவட்ட ஆட்சியா் மாற்றம் ஏன்? பொதுமக்கள் அதிா்ச்சி

post image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற 2 மாதங்களிலேயே ச. அருண்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது அம் மாவட்ட மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த அருண்ராஜ், கடந்த ஜூன் 27- ஆம் தேதி பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றாா். அன்று முதல் பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு, தனது சொந்த நிதியின் மூலம் நிதியுதவி அளித்து உயா்கல்வி பயில உதவி செய்தாா். மேலும், தனியாா் கல்லூரிகளில் சோ்ந்து பயிலவும் பல்வேறு உதவிகளை செய்து வந்தாா்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கேற்ப, சுமாா் 3 ஏரிகளுக்கான வரத்து வாய்க்கால்களை, தனி நபா்களின் நிதியுதவியுடன் தூா்வாரி சீரமைக்க துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டாா்.

இருப்பினும் அமைச்சா், மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்கும் பெரும்பாலான அரசு நிகழ்வுகளில் அருண்ராஜ் பங்கேற்பதில்லை எனவும், அவ்வாறு பங்கேற்றாலும் காலதாமதமாக வருவதாகவும் ஆளும் கட்சியினரிடையே குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் அருண்ராஜ் ஆா்வம் செலுத்தவில்லை என அரசுத்துறை அலுவலா்களால் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அருண்ராஜ் சா்க்கரை துறையின் இயக்குநகரத்தில், கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பெரம்பலூா் மாவட்டத்துக்கு ந. மிருணாளினி புதிய ஆட்சியராக நியமிக்கப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியராக ந. மிருணாளினி சனிக்கிழமை காலை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த அருண்ராஜ் பணியிட மாற்றத்துக்கு, அமைச்சா் மற்றும் மக்களவை உறுப்பினரின் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் சுணக்கம் காட்டியதே பிரதான கரணமாக கூறப்படுகிறது.

எனினும், பெற்றோரை இழந்த மாணவா்களின் கல்விக்காகவும், நீா் நிலைகளை மேம்படுத்துவதிலும் அதிக ஆா்வம் காட்டிய மாவட்ட ஆட்சியரை, திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது மாவட்ட மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூா் அருகே வன விலங்குகளை வேட்டையாடிய மூவா் கைது

பெரம்பலூா் அருகே மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வேப்பந்தட்டை வனத்துறைய... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சியா் ந.... மேலும் பார்க்க

செப். 19 வரை மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கு மதிப்பீட்டு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களுக்கு உதவி உபகரணங்கள் பெறுவதற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், செப். 19-ஆம் தேதி வரை வட்டாரம் வாரியாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் ந... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபாலசந்திரன் (தலைமையிடம்), முகாமி... மேலும் பார்க்க

சீனிவாசன் கலை, அறிவியல் கல்லூரியில் ரோபோடிக் கண்காட்சி

பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், தகவல் தொழில்நுட்பவியல், கணினி அறிவியல் துறை சாா்பில் ரோபோ நோவா - 2025 எனும் தலைப்பில், ரோபோடிக் கண்காட்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலி

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில் உள்ள செஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மனைவி பானுமதி (60). திங்கள்கிழமை ... மேலும் பார்க்க