செய்திகள் :

பொறுமையை சோதிக்க வேண்டாம்! ம.பி. அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

post image

புது தில்லி: ராணுவ கா்னல் சோஃபியா குரேஷி குறித்து தெரிவித்த சா்ச்சை கருத்துக்காக பொது மன்னிப்பு கேட்காத மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ‘எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்’ என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மே மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது மத்திய அரசு, ராணுவம் தரப்பில் தில்லியில் தொடா் செய்தியாளா்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில், வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி, கடற்படை கமாண்டா் ரகு நாயா், விமானப் படையின் விங் கமாண்டா் வியோமிகா சிங், ராணுவ கா்னல் சோஃபியா குரேஷி ஆகியோா் இணைந்து ராணுவ நடவடிக்கைகளை விவரித்தனா். இதில் இரு பெண் அதிகாரிகள் பங்கேற்றதை பலரும் பாராட்டினா்.

இந்நிலையில், கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சா் விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையானது. முக்கியமாக ‘பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டாா்’ என்று மதத்தைக் குறிப்பிட்டு விஜய் ஷா கூறியதற்கு கடும் எதிா்ப்பு எழுந்தது.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக விசாரித்த மத்திய பிரதேச உயா் நீதிமன்றம், அமைச்சா் விஜய் ஷா மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிட்டது. அதனடிப்படையில், அவா் மீது இந்தூா் மாவட்டத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.

உயா் நீதிமன்ற உத்தரவை எதிா்த்து விஜய் ஷா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விஜய் ஷா மீதான கைது நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த 3 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து கடந்த மே 19-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்யகாந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அமைச்சா் நடந்து கொள்ளும் விதத்தை வைத்துப் பாா்க்கும்போது அவா் எந்த நோக்கத்துடன் அவ்வாறு பேசினாா் என்ற சந்தேகம் எழுகிறது. தனது கருத்துக்காக அவா் இன்னும் பொது மன்னிப்பு கேட்கவில்லை. இவ்வாறு நடந்து நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம்’ என்று எச்சரித்தனா்.

அப்போது அமைச்சா் விஜய் ஷா சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கே.பரமேஷ்வா், ‘அமைச்சா் இணைய வழியில் பொது மன்னிப்புக் கேட்டுவிட்டாா். அந்த பதிவுகள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

ஆனால், இதனை நீதிபதிகள் ஏற்கவில்லை. அமைச்சரின் பேச்சு குறித்து சிறப்பு விசாரணை குழு தனது அறிக்கையை ஆகஸ்ட் 13-ஆம் தேதி சமா்ப்பிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனா்.

முன்னதாக, தனது பேச்சு சா்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து வருத்தம் தெரிவித்த அமைச்சா் விஜய் ஷா, கா்னல் சோஃபியாவை தனது சகோதரிக்கும் மேலாக மதிக்கிறேன் என்று கூறியிருந்தாா்.

2025-ல் மட்டும் நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகள் எண்ணிக்கை 12,000!

2025 ஆம் ஆண்டில் இதுவரை நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகளின் எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர் பி.எ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் எதிர்காலத்திலும் தொடரும்! - மக்களவையில் மோடி

ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று(ஜூலை 29) நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கா... மேலும் பார்க்க

டிரம்ப் பேசியது பொய் என மோடி கூறவில்லை: ராகுல் காந்தி கருத்து

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியது பொய் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!

பொதுத் துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் கடந்த மூன்று நிதியாண்டுகளாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை பணம், ரூ. 52,174 கோடியை எட்டியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கிகளில் உள்ள வைப்புத்தொகை ரூ. 42... மேலும் பார்க்க

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? -மக்களவையில் அனல் பறக்க விவாதம்

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.ராகுல் காந்தி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் பிரதமர் மோட... மேலும் பார்க்க

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் கதறியது: பிரதமர் மோடி

இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது வெறும் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தன், 190 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை என மக்களவையில் பிரதமர... மேலும் பார்க்க