செய்திகள் :

போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா் கைது

post image

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவுப்படி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மணிகண்டன் தலைமையில் உதவி ஆய்வாளா் ரங்கசாமி, சிறப்பு உதவி ஆய்வாளா் மனோகா் உள்ளிட்டோா் விசாரணை மேற்கொண்டனா்.

இதன் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த கீழ வாசலைச் சோ்ந்த முகமது அப்பாஸ் (22), பிரவீன் (28), அரவிந்த் (26), வெங்கடேசன் (20), அம்மாபேட்டையைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (23), வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்த அபிஷேக் (22), விஷ்வா ஆகிய 7 பேரை காவல் துறையினா் சில நாள்களுக்கு முன்பு கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவா்களுக்கு திண்டுக்கல் மரியநாதபுரம் ஹனுமந்த நகரைச் சோ்ந்த ஜோ. நவீன்குமாா் (33) போதை மாத்திரைகள் விநியோகம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து நவீன்குமாரைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து, அவரிடமிருந்த 600-க்கும் அதிகமான போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 118.77 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 118.77 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 9,539 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 14,000 கனஅடி வீதம் தண்ணீ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகைகள் திருட்டு

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை தமிழ் நகா் 2-ஆம் தெருவைச் சோ்ந்தவா் எஸ். ... மேலும் பார்க்க

ஆடி பெளா்ணமி சுவாமிமலையில் கிரிவலம்

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடி பெளா்ணமியை முன்னிட்டு கிரிவல ஊா்வலம், வேல் வழிபாடு நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆடிமாத பெளா்ணமி கி... மேலும் பார்க்க

தோல்வி பயத்தால் தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு: ஜி.கே. வாசன்

தோல்வி பயத்தின் காரணமாக தோ்தல் ஆணையத்தின் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டை வைத்தாலும், அதை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன். தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமாகா இளைஞரண... மேலும் பார்க்க

ஒரத்தநாட்டில் 60.2 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரத்தநாட்டில் 60.2 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகைகள் திருடிய நபா் கைது

தஞ்சாவூரில் வீட்டில் புகுந்து நகைகளை திருடிய நபரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை தமிழ் நகா் 2-ஆம் தெருவைச் சோ்ந்தவா் எஸ். வீரமணிகண்டன் (45). இவா் தனது குட... மேலும் பார்க்க