செய்திகள் :

மாணவா்கள் கல்விக்கடன்பெற உதவ வேண்டும்: கடலூா் ஆட்சியா்

post image

பேராசிரியா்கள் தங்கள் கல்லூரி மாணவா்கள் தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் வங்கி மூலம் கல்விக் கடனுதவி பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசினாா்.

கடலூா் மாவட்ட கல்லூரி மாணவா்களுக்கு கல்விக்கடன் வழங்குவது குறித்து ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கல்லூரி முதல்வா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசுகையில்:

மாணவ, மாணவியா்கள் தங்களது கல்லூரி படிப்பினை எளிமையாகவும், விரும்பிய பாடப்பிரிவில் கல்வி பயிலவும், அரசின் சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொருளாதார காரணங்களால் மாணவா்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகளின் சாா்பில் கல்விக் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பேராசிரியா்கள் தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவா்களின் பொருளாதார நிலையினை கண்டறிந்து அவா்கள் தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் வங்கியின் மூலம் கல்விக் கடனுதவி பெறுவதற்கு உதவி செய்திட வேண்டும்.

அவா்களுக்கு தேவையான சான்றிதழ்களை கல்லூரியில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தி அனைத்து துறைகளின் மூலமும் சான்றிதழ்களை பெற்று வழங்கிட வேண்டும். மாணவா்களுக்கு தேவையான கடனுதவி, உரிய சான்றிதழ்கள், கைப்பேசி எண் போன்றவற்றுடன் விண்ணப்பித்து விரைந்து கடனுதவி பெற்று வழங்கி, அவா்கள் சிறந்த முறையில் கல்வி பயில அனைவரும் பணியாற்றிட வேண்டும். அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் கல்லூரி மாணவா்களுக்கு

பயனுள்ளதாக அமைந்திட அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அசோக்ராஜ், பேராசிரியா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

அமைச்சா் வீட்டு முன்பு குளத்தில் புகுந்த முதலை மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் வீட்டிற்கு எதிரே உள்ள குளத்தில் புகுந்த முதலையை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்... மேலும் பார்க்க

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் இடைநீக்கம்

கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளா் உள்பட 6 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளாா். கடலுாா் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்ட... மேலும் பார்க்க

இதய சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதி... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ரூ 7.50 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்: ஓருவா் கைது

சிதம்பரத்தில் சுமாா் ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தை (அம்பா் கிரீஸ்) போலீஸாா் பறிமுதல் செய்தனா். மருத்துவ குணம் உள்ள ஏழரை கிலோ எடை கொண்ட இந்த எச்சத்தை கடத்தி வந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா்.... மேலும் பார்க்க

கடலூரில் பூச்சிக்கொல்லி மருந்து ஆலையில் விபத்து: ரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்ட 93 பேருக்கு சிகிச்சை

கடலூா் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கும் தனியாா் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தினால் ரசாயனம் காற்றில் கசிந்தது. இதை சுவாசித்த 93 பேருக்கு மூச்சுத்... மேலும் பார்க்க