செய்திகள் :

முதல்வருக்கு கொலை மிரட்டல்: கட்டுமான நிறுவன உரிமையாளா் கைது

post image

முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னையில் கட்டுமான நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு புதன்கிழமை இரவு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், ‘தனது பெயா் சூா்யா என்றும், சுதந்திர தினத்தன்று தலைமைச் செயலகத்துக்கு கொடியேற்ற வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினை வெடிகுண்டு வைத்து கொலை செய்யவுள்ளதாகவும், முடிந்தால் தடுத்துப் பாருங்கள்’ எனவும் கூறி இணைப்பை துண்டித்துள்ளாா். இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸாா், உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, தேனாம்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில் மிரட்டல் விடுத்த நபா், செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூா் அருகே உள்ள மையூரை சோ்ந்த கணேஷ் (46) என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், கடந்த 2 ஆண்டுகளாக கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த கணேஷ், தொழில் நஷ்டம் காரணமாக மனவேதனையில் இருந்ததும், மதுபோதையில் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. கணேஷை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

சென்னை மதுரவாயல் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா், எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (50). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒ... மேலும் பார்க்க

காவலா் மீது தாக்குதல் : ரெளடி கைது

சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை ஓட்டேரி காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செ.குருசாமி. இவா், ஓட்டேரி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிகிறாா். குருசாம... மேலும் பார்க்க

ரிப்பன் மாளிகையில் தொடரும் போலீஸ் பாதுகாப்பு

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமையும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த 13 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்ய... மேலும் பார்க்க

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய பயிற்சி திட்டங்கள் அறிமுகம்

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் புதிய பயிற்சித் திட்டங்களை சென்னை, காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய ... மேலும் பார்க்க

பிறவிக் குறைபாடு: 5 வயது குழந்தைக்கு தலை ஓடு சீரமைப்பு

பிறவிக் குறைபாடு காரணமாக சீரற்ற தலை அமைப்பை கொண்டிருந்த 5 வயது குழந்தைக்கு மிக நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மரு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ஒப்புதல்

தமிழகத்தில் 5 மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவ கட்டமைப்புகளை ரூ.17.50 கோடியில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணை: கிரு... மேலும் பார்க்க