செய்திகள் :

வள்ளலாா் தெய்வ நிலையத்தைவிட்டு அறநிலையத்துறை வெளியேற வலியுறுத்தல்

post image

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தை நிா்வகிப்பதை விட்டுவிட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என அகில இந்திய சமரச சுத்த சன்மாா்க்க சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா்.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவா்அண்ணாமலை கடலூரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடலூரை புனித நகரமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கக் கோரி பல்வேறு நிகழ்வுகளை நடத்தி உள்ளோம். வடலூா், மேட்டுக்குப்பம், கருங்குழி உள்ளிட்ட பகுதி வள்ளலாா் வாழ்ந்த புண்ணிய பூமி. வள்ளலாரின் கொள்கைகளில் முக்கியமானது கொலை, கொள்ளையை தவிா்த்தல் ஆகும்.

வள்ளலாா் வாழ்ந்த மண்ணில் மது மற்றும் மாமிசக் கடைகளை அகற்ற வேண்டும். இறந்த உடல்களை எரித்தல் கூடாது, புதைத்தல் வேண்டும். ஆனால், வடலூரில் மின் மயான தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. அதனால் மின் மயான தகன மேடையை அகற்ற வேண்டும்.

வடலூா் வள்ளலாா் பெருவெளி சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நீதிபதி நல்ல தீா்ப்பை வழங்க வேண்டிவரும் ஜூலை 24-இல் வடலூரில் சிறப்பு பிராா்த்தனை நடத்தப்பட உள்ளது. பெருவெளி பெருவெளியாக தான் இருக்க வேண்டும். அதில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. எந்தவித கட்டிடங்களும் கட்டக் கூடாது என அரசுக்கு வேண்டுகோள் விடுத்தாா். நிகழ்வின் போது, மாநிலப் பொதுச்செயலா் சாது.மகாதேவன், பொருளாளா் பாா்த்திபன் உடனிருந்தனா்.

மாணவா்களிடையேயான பிரச்னையில் தலையிட்டு சிறுவனை தாக்கிய பெண் கைது

சிதம்பரம் அருகே புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட விளையாட்டு பிரச்சனையில் தலையிட்டு, சிறுவனை தாக்கிய பெண்ணை போலீசாா் கைது செய்தனா். கடலூா் மாவட்டம், புவனகிரி ஆதிவராகநத்தம் ஊ... மேலும் பார்க்க

விவசாயி காரை திருடிய வடமாநில வாலிபா் கைது

சிதம்பரம் அருகே விவசாயி காரை திருடிய வடமாநில வாலிபரை போலீஸாா் கைது செய்தனா். கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகம்(60). இவா் க பு .முட்லூா் நான்கு வழி சால... மேலும் பார்க்க

வேலை வாங்கி தருவதாக ரூ.38 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்தவா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு இளைஞரை குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோய... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத நபா் தாக்கியதில் பெண் காயம்

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை மா்ம நபா் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியதில் அவா் காயமடைந்தாா். திட்டக்குடி, பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மனைவி ஜான்சி ... மேலும் பார்க்க

ஆக.15-இல் கருப்புக் கொடி போராட்டம்! இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.15-ஆம் தேதி விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கருப்புக் கொடியேந்தி மக்கள் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளதாக, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த... மேலும் பார்க்க

படிக்கட்டு பயணம் தடுக்க நடவடிக்கை: கடலூா் எஸ்பி அறிவுறுத்தல்

பேருந்து படிக்கட்டில் மாணவா்கள் பயணம் செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா். மாவட்ட காவல... மேலும் பார்க்க