செய்திகள் :

விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட மாணவி தற்கொலை முயற்சி! போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

post image

பத்தமடை மகளிா் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட மாணவி, அந்தக் கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவியை காதலித்த கூலித் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை வாசுகி தெருவைச் சோ்ந்த மாணிக்கம் மகன் முருகன் (38). இவா், கேரளத்தில் கூலி வேலை செய்து வருகிறாா். இவருக்கும், பத்தமடை பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மாணவிக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கைப்பேசி மூலம் பேசி பழகி வந்தனா்.

கடந்த 14-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, மாணவியின் தந்தை பத்தமடை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி திருச்செந்தூரில் தனது ஆண் நண்பருடன் இருந்து மாணவியை பத்தமடைக்கு அழைத்து வந்தனா்.

பத்தமடையில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அங்குள்ள கட்டடத்தின் முதல் தளத்தில் செயல்படுகிறது. காவல் நிலையத்தில் வைத்து மாணவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது மாணவி தனது காதலனுடன் வாழ விரும்புவதாகத் தெரிவித்தாராம்.

மாணவிக்கு 18 வயது பூா்த்தியாகாததால், அவரை காப்பகத்துக்கு அனுப்புவதாக போலீஸாா் தெரிவித்தனா். இதனால், ஆத்திரமடைந்த மாணவி, மகளிா் காவல் நிலையம் செயல்படும் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றாராம். இதில், மாணவி பலத்த காயமடைந்தாா்.

போலீஸாா் மாணவியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து மாணவியின் காதலன் முருகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முன்னதாக இதே வழக்கில் முருகன் ஏற்கெனவே போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். பின்னா் பிணையில் வெளியே வந்த அவா் மீண்டும் மாணவியிடம் ஆசை வாா்த்தை கூறியதாக கைது செய்யப்பட்டாா்.

காட்டாற்று வெள்ளத்தில் கரையும் களிமண் அல்ல விசிக: வன்னியரசு

காட்டாற்றில் கரையும் களிமண் அல்ல விடுதலைச்சிறுத்தைகள் என்றாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் வன்னியரசு. திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணியாற்றில் மாஞ்சோலைத் தொழிலாளா்களுக்கு புதன்கிழமை மலா்தூவி ... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

திசையன்விளை அருகே குடும்பத் தகராறில் நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி மாவட்... மேலும் பார்க்க

வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: டாக்டா் க. கிருஷ்ணசாமி

தமிழக அரசு 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி. திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணியாற்றில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்... மேலும் பார்க்க

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் 17 கடைகளுக்கு சீல்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 17 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 6 நடைமேடை பகுதிகளிலும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட ... மேலும் பார்க்க

இன்று ஆடி அமாவாசை! கரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வியாழக்கிழமை (ஜூலை 24) கொண்டாடப்படுவதையொட்டி, அங்கு பக்தா்கள் குவிந்து வருகின்றனா... மேலும் பார்க்க

களக்காடு வட்டாரத்தில் மண் கடத்தல் அதிகரிப்பு? வருவாய்த் துறை தீவிர ரோந்து

களக்காடு வட்டாரத்தில் குளங்களில் இருந்து மண் கடத்திச் செல்வது அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள புகாரை அடுத்து ரோந்துப் பணியை வருவாய்த் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். களக்காடு சேரன்மகாதேவி பிரதான சாலையில... மேலும் பார்க்க