செய்திகள் :

Karnataka: `ரூ.14 கோடியில் புதிய கட்டடம்’ - படித்த அரசுப் பள்ளியை புதுப்பித்துக் கொடுத்த மருத்துவர்

post image

ஓய்வு பெற்ற டாக்டர் ஒருவர் ரூ.14 கோடி கோடி செலவில் தான் படித்த அரசுப் பள்ளியை நவீன முறையில் கட்டிக்கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

கர்நாடகாவைச் சேர்ந்தவர் டாக்டர் எச்.எம். வெங்கடப்பா. 79 வயதான இவர் 1949 முதல் 1957 வரை ஹொங்கனூரில் உள்ள அரசு பள்ளியில் படித்திருக்கிறார்.

படித்த அரசுப் பள்ளியை புதுப்பித்துக் கொடுத்த மருத்துவர்
படித்த அரசுப் பள்ளியை புதுப்பித்துக் கொடுத்த மருத்துவர்

ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த வெங்கடப்பா, மருத்துவராகி, அரசு பணியில் இருந்து தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். 2022 ஆம் ஆண்டு இவர் தான் படித்த அரசு பள்ளிக்கு ஒருமுறை சென்றிருக்கிறார்.

4.5 ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்த பள்ளி, அதே ஆண்டு ஜூனில் முழுமையாக இடிக்கப்பட்டிருக்கிறது. பின் இரண்டரை ஆண்டுகளில், அந்த இடத்தில் இரண்டு புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. இதற்கான 14 கோடி ரூபாய் செலவை டாக்டர் வெங்கடப்பா, தனது தனிப்பட்ட சேமிப்பிலிருந்து வழங்கி இருக்கிறார்.

50 விசாலமான வகுப்பறைகள், கணினிகள், ஸ்மார்ட்போர்டுகள், விஞ்ஞானம் மற்றும் கணித ஆய்வகங்கள், நூலகம் மற்றும் முழுமையான விளையாட்டு வசதிகள் அந்தப் பள்ளியில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்நிலையில் டாக்டர் எச்.எம். வெங்கடப்பா தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில், “ கிராமத்தில் உள்ள ஏழை மாணவர்கள் தரமான கல்வியை இலவசமாகப் பெற வேண்டும் என்பதற்காகவே நான் இந்தப் பள்ளியைக் கட்டி நவீனமாக மாற்றி இருக்கிறேன்.

படித்த அரசுப் பள்ளியை புதுப்பித்துக் கொடுத்த மருத்துவர்
படித்த அரசுப் பள்ளியை புதுப்பித்துக் கொடுத்த மருத்துவர்

தற்போது இந்த பள்ளியில் எல்.கே.ஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை, கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர் சேர்க்கையும் தற்போது அதிகரித்து இருக்கிறது” என்று நெகிழ்வாகப் பேசியிருக்கிறார்.

மேலும், பள்ளி பராமரிப்பிற்காக ஆண்டுதோறும் 10 லட்ச ரூபாய் வழங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"ரூ.5000 டு ரூ.46 லட்சம் சம்பளம்; என் அம்மாதான் எனக்கு ஹீரோ" - தாயின் தியாகம் குறித்து நெகிழும் மகன்

தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், தான் மாதம் ரூ. 5,000 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆண்டுக்கு ரூ. 46 லட்சம் உயர்ந்திருப்பதாகவும், தன்னுடைய இந்த வளர்ச்சியில் தனது... மேலும் பார்க்க

`கையெழுத்துக்காக அறையில் பூட்டி கட்டாயப்படுத்தினர்!' - கரிஷ்மா கபூர் முன்னாள் கணவரின் தாயார் புகார்!

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு லண்டனில் காலமானார். அவர் மறைவை தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கம்பெ... மேலும் பார்க்க

Zepto: மறைமுக கட்டணமா? - `COD டெலிவரியில் இதான் நடக்கிறது' - மார்க்கெட்டிங் நிபுணர் சொல்வதென்ன?

பிரபல விரைவு வர்த்தக தளமான ஜெப்டோ, கேஷ் ஆன் டெலிவரி (COD) ஆர்டர்களில் மறைமுகமாக கட்டணம் விதிப்பதாகவும், இதை வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெங்களூருவைச... மேலும் பார்க்க

மும்பை: தொடர் ரயில் குண்டுவெடிப்பு; 12 குற்றவாளிகளை விடுவிக்கும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

மும்பையில் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 180 பேர் வரை உயிரிழந்தனர். 700 பேர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சிங்கப்பூர்: ஏர்போர்ட் கடைகளில் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு - சிக்கிய இந்தியர்

சிங்கப்பூர் ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள 14 கடைகளில் இருந்து பைகள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 38 வயது இந்தியர் ஒருவர் திருடியதாக அந்நாட்டு காவ... மேலும் பார்க்க

AI -பேச்சால் ஈர்க்கப்பட்டு, மனைவியிடம் விவாகரத்து கேட்ட 75 வயது முதியவர் - சீனாவில் நடந்த சம்பவம்

சீனாவில் 75 வயதான முதியவர் ஒருவர், ஆன்லைனில் பார்த்த ஒரு "பெண்ணின்" பேச்சால் ஈர்க்கப்பட்டு, தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார்.அந்தப் "பெண்" ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அவருக்கு தெரியவில்லை... மேலும் பார்க்க