செய்திகள் :

அஜித்குமார் கொலை வழக்கு: நகைத் திருட்டு புகாரளித்த நிகிதாவிடம் `3' மணி நேரம் நீண்ட சிபிஐ விசாரணை!

post image

அஜித்குமார் கொலை வழக்கில், திருமங்கலம் பேராசிரியை நிகிதாவிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றிருக்கிறது.

அஜித்குமார் கொலை வழக்கு

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது, மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் அளித்த நகைத் திருட்டுப் புகாரில் கடந்த 27 ஆம் தேதி திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற நிலையில்... மானாமதுரை டி.எஸ்.பி-யின் தனிப்படையினர் அஜித்குமாரை சட்டவிரோதமாக அழைத்துச் சென்று பல இடங்களில் வைத்து தாக்கியதில் உயிரிழந்தார்.

தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த, இந்த வழக்கு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். டி.எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சிவகங்கை எஸ்.பி இடமாற்றம் செய்யப்பட்டார்.

பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள். தொடர்ந்து, இதுகுறித்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றியதாக தெரிவித்தது.

நிகிதா

இதனையடுத்து டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த 14 ஆம் தேதி விசாரணையைத் தொடங்கினர். திருப்புவனம், மடப்புரம் கோயில் உட்பட அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, திருப்புவனம் காவல் நிலையத்திலும் ஆய்வு செய்தனர். அஜித்குமாருடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சக ஊழியர்கள், நண்பர்கள், கோயில் அலுவலர், ஊழியர், அரசு மருத்துவர்கள், காவல்துறையினர், அஜித்குமார் குடும்பத்தினர் என அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் 11 ஆவது நாளான இன்று இவ்வழக்கின் முக்கிய சாட்சியும், நகை காணாமல் போனதாக புகாரளித்தவருமான மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை நிகிதா, அவரது தாயார் சிவகாமி ஆகிய இருவரிடமும் மதுரை சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடந்தது.

கடந்த 27 ஆம் தேதி நிகிதா தாயாருடன் காரில் எங்கெங்கு சென்றார்? மருத்துவமனைக்கு சென்றாரா? நகைகளை எந்த இடத்தில் வைத்து கழற்றினார்? என்னென்ன வகையிலான நகைகள்... அவற்றுக்கான ரசீது, நகை காருக்குள் வைக்கப்பட்ட இடம் குறித்தும், கோயிலில் என்ன நடந்தது? அஜித்குமாரிடம் பேசியது என்ன ? திருப்புவனம் காவல் நிலையத்தில் என்ன நடந்தது? நிகிதா யார் யாருடன் மொபைலில் பேசினார்? என்பது குறித்தும் பல கேள்விகளை சிபிஐ அதிகாரி மோஹித்குமார் தலைமையிலான குழுவினர் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

மூன்று மணி நேரத்துக்கு மேலாக நடந்து விசாரணைக்குப் பின் நிகிதாவும் அவர் தாயாரும் கிளம்பிச் சென்றார்கள்.

``பேரல்களை அடுக்கி, சுவர் ஏறி குதித்தேன்" - கண்ணூர் சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி சொல்வது என்ன?

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவ... மேலும் பார்க்க

சென்னை: திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்திய வடமாநில இளைஞர் - கொலையில் முடிந்த கூடா நட்பு!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (47). இலரின் மனைவி சரசு (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். கணேசமூர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் லாக்கப் டெத்: அப்ரூவராக மாற விரும்பும் ஸ்ரீதர்; எதிர்க்கும் சிபிஐ.. பின்னணி என்ன?

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்த பணி நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுச்செய்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிபிஐ தரப்பில் எதிர்ப்பு ... மேலும் பார்க்க

கண்ணாடி துகள்; சீனா டிவைஸ்; 100 வழக்குகள் - சொகுசு கார் திருடனின் பகீர் பின்னணி!

சென்னை, அண்ணாநகர் மேற்கு, 16வது மெயின்ரோடு, கதிரவன் காலனியில் குடியிருந்து வருபவர் எத்திராஜ் ரத்தினம். இவர் கடந்த 10.06.2025-ம் தேதி தன்னுடைய Toyoto Fortuner காரை வீட்டின் எதிரில் நிறுத்தி வைத்திருந்த... மேலும் பார்க்க

திருச்சி: கோயில் திருவிழாவில் வாண வெடி வெடித்து குழந்தை பலி; தாய் படுகாயம்; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் திருப்பைஞ்ஞீலி ஊராட்சியில் உள்ள மூவராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன். இவர், கொத்தனாராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மனோகரி.இவர்களுக்குத்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: சகோதரர்கள் வெட்டி கொலை; கொலையாளிகளைத் தேடும் போலீஸ்; அறந்தாங்கியில் அதிர்ச்சி சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த காத்தமுத்து மகன்கள் கண்ணன் (வயது: 32) மற்றும் கார்த்தி (வயது: 28). இதில், கண்ணனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கார்த்தி... மேலும் பார்க்க