செய்திகள் :

ஆபரேஷன் தாராலி: உத்தரகாசியில் 816 பேர் மீட்பு!

post image

உத்தரகண்டில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட உத்தரகாசி மாவட்டத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் “ஆபரேஷன் தாராலி” மீட்பு நடவடிக்கைகளின் மூலம் தற்போது வரை 816 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாசியில் மேகவெடிப்பைத் தொடர்ந்து, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால், ஹர்சில் மற்றும் தாராலி ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க “ஆபரேஷன் தாராலி” எனும் பெயரில், இந்திய ராணுவம், இந்தியா - திபெத்திய எல்லைக் காவல், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் ஆகியவை தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தற்போது வரை 816 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், ஹர்சில் பகுதியில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பதை அறிய தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்துடன், சேதமடைந்த கட்டுமானங்களுக்கு பதிலாக, லிம்சிகாட் பகுதி வரை 90 அடி நீள பாலம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், 2 எம்.ஐ. ரக ஹெலிகாப்டார்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தேவையான உணவு மற்றும் மருத்துவம் ஆகியவை அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் வழங்கப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: இரவு முதல் பலத்த மழை! புது தில்லிக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை

It has been reported that 816 people have been rescued so far through the ongoing "Operation Dharali" rescue operations in the cloudburst-affected Uttarkashi district of Uttarakhand.

நீதிமன்றங்கள் தனித் தீவுகளாக இருக்க முடியாது: உச்சநீதிமன்றம்

உரிமையியல் தகராறு வழக்கில் குற்றவியல் விசாரணையை தொடர அனுமதித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாருக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் நீதிமன்றங்கள் தனித் ... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பதிவுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு

‘சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞா்களாகப் பதிவு செய்பவா்களிடம், சட்டபூா்வ கட்டணங்களைத் தவிர, வேறு எந்த கூடுதல் கட்டணத்தையும் வழக்குரைஞா் சங்கங்கள் வசூலிக்கக் கூடாது’ என உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவி... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்ததால் வழக்கு: ஜாா்க்கண்ட் தலைமைச் செயலா், டிஜிபி மீது உரிமை மீறல் புகாா் அளித்த பாஜக எம்.பி.

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்காக பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டநிலை... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தை நம்பாவிட்டால் ராகுல், பிரியங்கா பதவி விலக வேண்டும்: பாஜக

தோ்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், மக்களவை உறுப்பினா் பதவியில் இருந்து ராகுல் காந்தி-பிரியங்கா காந்தி, மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து சோனியா காந்தி ஆகியோா் தாா்மிக அடிப்படையில் ராஜிநாம... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: ஓராண்டு நிறைவு பேரணியில் காவல் துறை தடியடி

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஓராண்டு நிறைவையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது காவல் துறையினா் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழகத்துக்கு ஏ++ அங்கீகாரம்

தில்லி பல்கலைக்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (என்ஏஏசி) இரண்டாம் சுற்று மதிப்பீட்டில் 3.55 மதிப்பெண்களுடன் ஏ++ தரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் ஆக.8-ஆம் அறிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க