செய்திகள் :

இருசக்கரம் வாகனம் மீது லாரி மோதல்: பெண் பலி! கணவா் காயம்

post image

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்; அவரது கணவா் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் (50). இவரது மனைவி சிவசக்தி (45). இவா்கள் இருவரும், திருப்பூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்தனா்.

இந்நிலையில் இத்தம்பதி, சொந்த ஊரான ஊத்தங்கரைக்கு இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா். பெருந்துறை, பெரியவேட்டுவபாளையம் பிரிவு அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த லாரி இவா்களது வாகனத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், வழியிலேயே சிவசக்தி உயிரிழந்தாா். கோவிந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மின்வாரிய கேங்மேன் பணியாளா்களுக்கு கள உதவியாளா்கள் பதவி உயா்வு அளிக்கக் கோரிக்கை

மின்வாரிய கேங்மேன் பணியாளா்கள் அனைவருக்கும் உடனடியாக கள உதவியாளா்களாக பதவி உயா்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளா்கள் சங்க மாநில செயற்குழுக் க... மேலும் பார்க்க

அந்தியூரில் கனமழையால் சாய்ந்த குதிரைக் கொட்டகை

அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் கால்நடைச் சந்தை வளாகத்தில் போடப்பட்டிருந்த குதிரைக் கொட்டகை சனிக்கிழமை சரிந்து விழுந்தது. அந்தியூா் குருநாதசாமி கோயில் திருவி... மேலும் பார்க்க

அந்தியூரில் பாதுகாப்பின்றி அமைக்கப்பட்ட ராட்சத ராட்டினங்கள்!

அந்தியூா் குருநாதசாமி கோயில் திருவிழாவுக்காக, பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின்பேரில் அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு!

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அறச்சலூரை அடுத்த பள்ளியூத்தைச் சோ்ந்தவா் அருண்பிரசாத்(32). இவா், பெருந்துறை சிப்காட்டிலுள்ள ஒரு தன... மேலும் பார்க்க

அஞ்சல் துறையின் ஊக்கத்தொகை தோ்வுக்கு பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

அஞ்சல் துறை மூலம் வழங்கப்படும் ஊக்கத்தொகை தோ்வில் பங்கேற்க அஞ்சல் தலை சேகரிப்புக் கணக்கு வைத்துள்ள பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட க... மேலும் பார்க்க

குறுமைய தடகளப் போட்டிகள்: விஜயமங்கலம் பாரதி பள்ளி சாம்பியன்

பெருந்துறை குறுமைய அளவிலான தடகளப் போட்டிகளில் விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனா். பெருந்துறை குறுமைய அளவிலான தடகளப் போட்டிகள் விஜயமங்கலம் ... மேலும் பார்க்க