செய்திகள் :

உணவு, உடைகள் மீது அதிருப்தி! கணவர் மீது மனைவி தொடர்ந்த வழக்கு ரத்து!

post image

தான் சமைக்கும் உணவு மற்றும் அணியும் உடைகள் மீது குறைகூறுவதாக கணவர் மீது அவரது மனைவி சுமத்திய வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது.

மும்பையில், கடந்த 2022-ஆம் ஆண்டில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஒருவர், தனது மனைவி சமைக்கும் உணவு, அவர் அணியும் உடைகள் குறித்து கடுமையான கருத்துகளைக் கூறுவதாக, அவர் மீது அவரின் மனைவி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உணவு மற்றும் உடை மீதான எரிச்சலூட்டும் கூற்றுகளை கொடுமையான அல்லது துன்புறுத்தும் செயல்கள் என்று கூற முடியாது. அவ்வாறு இருக்கையில், கணவரையோ அவரது குடும்பத்தினரையோ விசாரணைக்கு கேட்டுக்கொண்டால், அது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும் என்றுகூறி, வழக்கை ரத்து செய்தது.

இதனிடையே, கணவர் மீதான மனைவியின் குற்றச்சாட்டுகளிலும் உண்மைத்தன்மை இல்லாதது தெரிய வந்தது. கணவருக்கு இருந்த உடல்நலப் பிரச்னைகள் குறித்து முன்னரே தன்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால், திருமணத்துக்கு முன்னதாகவே தான் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் குறித்து மனைவிக்கு கணவர் தகவல் பரிமாற்றத்தில் கூறியிருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம், திருமணத்துக்கு முன்னரே கணவரின் மருத்துவம் சார்ந்தவை அவருக்கு தெரிந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, தீபாவளியன்று ஒரு ஃபிளாட் வாங்க ரூ. 15 லட்சம் கேட்டதாகவும் மனைவி குற்றம் சாட்டினார். ஆனால், ஏற்கெனவே கணவரிடம் ஒரு ஃபிளாட் இருக்கும்போது ஏன் கேட்கிறார்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

நீதிமன்றங்கள் தனித் தீவுகளாக இருக்க முடியாது: உச்சநீதிமன்றம்

உரிமையியல் தகராறு வழக்கில் குற்றவியல் விசாரணையை தொடர அனுமதித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாருக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் நீதிமன்றங்கள் தனித் ... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பதிவுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு

‘சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞா்களாகப் பதிவு செய்பவா்களிடம், சட்டபூா்வ கட்டணங்களைத் தவிர, வேறு எந்த கூடுதல் கட்டணத்தையும் வழக்குரைஞா் சங்கங்கள் வசூலிக்கக் கூடாது’ என உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவி... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்ததால் வழக்கு: ஜாா்க்கண்ட் தலைமைச் செயலா், டிஜிபி மீது உரிமை மீறல் புகாா் அளித்த பாஜக எம்.பி.

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்காக பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டநிலை... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தை நம்பாவிட்டால் ராகுல், பிரியங்கா பதவி விலக வேண்டும்: பாஜக

தோ்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், மக்களவை உறுப்பினா் பதவியில் இருந்து ராகுல் காந்தி-பிரியங்கா காந்தி, மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து சோனியா காந்தி ஆகியோா் தாா்மிக அடிப்படையில் ராஜிநாம... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: ஓராண்டு நிறைவு பேரணியில் காவல் துறை தடியடி

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஓராண்டு நிறைவையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது காவல் துறையினா் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழகத்துக்கு ஏ++ அங்கீகாரம்

தில்லி பல்கலைக்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (என்ஏஏசி) இரண்டாம் சுற்று மதிப்பீட்டில் 3.55 மதிப்பெண்களுடன் ஏ++ தரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் ஆக.8-ஆம் அறிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க