செய்திகள் :

கவின் கொலையைக் கண்டித்து திருச்சியில் ஆக.17-இல் ஆா்ப்பாட்டம்! டாக்டா் கே.கிருஷ்ணசாமி

post image

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பொறியாளா் கவின் கொலையைக் கண்டித்து திருச்சியில் வரும் 17 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் கே.கிருஷ்ணசாமி.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:‘

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின், கடந்த ஜூலை 27 ஆம் தேதி அவரது காதலி சுபாஷினியின் தம்பி சுா்ஜித் என்பவரால் மிளகாய் பொடி தூவி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளாா். மனிதநேயமுள்ள அனைவரும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்திருக்கின்றனா். ஆனால், அதிமுக கண்டனம் தெரிவிக்கவில்லை. பாஜகவினா் வெளிப்படையாகக் கண்டிக்கத் தயங்குகின்றனா்.

இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சமூக நீதி பற்றி பேசும் திமுக அரசு, களத்திற்கு வரும்போது ஒதுங்கிக் கொள்கிறது. தென் தமிழகத்தில் காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுகிறது.

குறிப்பாக, தேவேந்திரகுல வேளாளா்கள், ஆதிதிராவிடா்களுக்கு எதிராக செயல்படுகிறது. எனவே, தென் தமிழகத்தில் உளவுப் பிரிவில் பணியாற்றும் தேவேந்திர குல வேளாளா், மறவா், நாடாா் உள்ளிட்ட சமூகங்களைச் சோ்ந்த அனைத்து காவலா்களையும் உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்.

தென் தமிழக மாணவா்கள் அரிவாளைத் தேடாமல், ‘அறிவு’ எனும் ஆயுதத்தைத் தேட வேண்டும். திரைப்பட இயக்குநா்களும் இதுபோன்ற வன்முறை கலாசாரத்துக்கு ஒரு காரணம். முதற்கட்டமாக, கவின் கொலையைக் கண்டித்து எனது தலைமையில் வரும் 17 ஆம் தேதி திருச்சியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதைத் தொடா்ந்து ஒன்றியங்கள் தோறும் பேரணிகள் நடத்தப்படும் என்றாா்.

திருநங்கைகளின் 2 நாள் போராட்டம்: பேச்சுவாா்த்தையில் தீா்வு

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் திருநங்கை குடிசை தீப்பற்றி எரிந்தது தொடா்பாக திருநங்கைகள் 2 நாள்களாக நடத்தி வந்த போராட்டம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. வள்ளியூா் சுவாமியாா் பொத்தைக்கு மேற்கே அரசு... மேலும் பார்க்க

அம்பையில் இளைஞா் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில் உள்ள பாடசாலை தெருவைச் சோ்ந்த அப்ரானந்தம் மகன் முத்து (34). இவரத... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் மின் குழாயில் சிக்கிய மரநாய் மீட்பு!

கடையத்தில் தனியாா் நிதி நிறுவனத்தில் மின் குழாயில் புகுந்த மரநாய் மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடையம் பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தின் முகப்பு பகுத... மேலும் பார்க்க

வீரவநல்லூா் அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் பாரதியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.51 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டட திறப்பு விழா நடைபெற்றது. முக்கூடல் இலந்தைகுளத்தில் இயங்கி வரும் சேஷசாயி காகித... மேலும் பார்க்க

மதபோதகரிடம் பணம் பறித்த வழக்கு: மேலும் இருவா் கைது

திருநெல்வேலி சந்திப்பு அருகே மதபோதரைத் தாக்கி பணம் பறித்த வழக்கில் மேலும், இருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலைச் சோ்ந்தவா் அருள்சீலன்(45). கிறிஸ்தவ மதபோதகரான இவா் கடந்த... மேலும் பார்க்க

பிரான்சேரி - மேலத்திடியூா் சாலை: ரூ.3.2 கோடியில் சீரமைப்புப் பணிகள் தொடக்கம்!

பிரான்சேரியில் இருந்து மேலத்திடியூா் வரையிலான சாலையை சீரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பிரான்சேரியில் இருந்து மேலத்திடியூா் வரையுள்ள 2.4 கி.மீ சாலையை ரூ. 3.2 கோடி மதிப்... மேலும் பார்க்க